T20 World Cup: Rishabh Pant or Dinesh Karthik against England in semis? Tamil News
ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நாளை நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பையில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவில், ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. தற்போது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.
Advertisment
இந்தியா vs இங்கிலாந்து: தினேஷ் கார்த்திக் vs ரிஷப் பண்ட் - யாருக்கு வாய்ப்பு?
இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் இடத்துக்காக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையேயான போட்டி அரையிறுதி போட்டியை விட தீவிரமாக இருந்து வருகிறது. டி.கே தொடரில் முதல் நான்கு ஆட்டங்களில் விளையாடிய நிலையில், பண்ட் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். கிரிக்பஸ் இணையத்தின் அறிக்கையின்படி இங்கிலாந்துக்கு எதிராக தனது இடத்தை பண்ட் தக்கவைத்துக் கொள்வார் என்று குறிப்பிட்டு இருந்தது.
Advertisment
Advertisements
மேலும், ஜிம்பாப்வேக்கு எதிராக தொடங்கிய அதே ஆடும் லெவன் அணியை இந்தியா களமிறக்க வாய்ப்புள்ளதாகவும், அந்த அணியில் இடம் பிடித்த பண்ட் மீண்டும் களமாட வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், டி.கே பேட்டிங்கில் சிறந்த நேரத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர் ரன்கள் சேர்க்க போராடினார். அதேசமயம், பண்ட் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதற்கு முன்பு அவர் இதுவரை தனது ஒரே அவுட்டில் ஆட்டமிழந்தார்.
நேற்று செவ்வாய்கிழமை இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இதில். டி.கே நீண்ட நேரம் பேட்டிங் செய்தாலும், பண்ட் அணி நிர்வாகத்தின் தேர்வாக இருக்கலாம். அதாவது, டி.கே இல்லாத நிலையில் ஃபினிஷராக இருக்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்படும்.
சுழல் பந்துவீச்சாளர்களில் யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் தவறவிடப்படலாம். அவருக்கு பதில் வழக்கம் போல் அக்சர் படேலுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். ஆகாஷ் சோப்ரா மற்றும் கெளதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் சாஹல் விளையாடவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வந்தாலும், இந்தியா குழப்பமடையும் திட்டங்களை மாற்ற வாய்ப்பில்லை.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் அளவுக்கு பெரியதாக இல்லாத அடிலெய்டு ஓவல் மைதானத்தின் பரிமாணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை இந்திய நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையில், வலைப்பயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் ரோகித் தனது வலது முன்கையில் பந்து தாக்கியதால் சிறிய காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் நன்றாகத் தோன்றினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமாடுவார் என்பதில் சந்தேகமில்லை.