/indian-express-tamil/media/media_files/IRkhz9F94oAW8xtkfPYP.jpg)
நடப்பு புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப்-க்குள் நுழைய முதல் 6 இடங்களுக்குள் வர வேண்டும்.
Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 32-25 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.
தலைவாஸ் அணியின் நட்சத்திர ரைடரான நரேந்தர் 'சூப்பர் 10' புள்ளிகளை எடுத்து அசத்தினார். டிஃபென்ஸ் வீரரான சாஹில் குலியா 'அதிக ஐந்து' புள்ளிகள் பெற்றார். உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான இந்த அசத்தல் வெற்றி மூலம் தலைவாஸ் அணி 45 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி பிளே-ஆஃப்-க்குள் நுழைய முதல் 6 இடங்களுக்குள் வர வேண்டும்.
உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி அணி தொடரில் உயிர்ப்புடன் இருக்க உதவியுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, புள்ளிகள் சமன்பாட்டில் அவர்களுக்கு அதிகம் மாறவில்லை. அவர்கள் பிளே-ஆஃப்-க்குள் செல்வதற்கு அரிதாகவே வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.