/tamil-ie/media/media_files/uploads/2023/06/SS-vs-SMP.jpg)
டி.என்.பி.எல் கிரிக்கெட்
தமிழ் நாடு பிரீமியர் லீக் தொடரில் இன்று சேலம் மைதானத்தில் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் சேலம் – மதுரை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சேலம் அணி 19.4 ஓவர்களில் வெறும் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தன்வர் 29 ரன்களும், சாத்விக், சங்கர் ஆகியோர் தலா 17 ரன்களும், சன்னி சந்து 16 ரன்களும் எடுத்தனர் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மதுரை அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளும், கவுதம், எம்.அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. கவுசிங் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், சவப்னில் சிங் 25 ரன்களும், அபிசிக் 32 ரன்களும் குவித்து வெற்றியை தேடி கொடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.