Advertisment

கில்லுக்கு கண்டனம், ஓட்டலில் இடம் இல்லை; தரையில் அமர்ந்த இலங்கை வீரர்கள்… இன்றைய டாப் 5 கிரிக்கெட் நியூஸ்!

கில் சர்ச்சைக்குரிய ட்வீட்டைப் பதிவு செய்ததற்காக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Top 5 Cricket News In Tamil 12 June 2023

Sports – Cricket News in tamil

Top 5 Cricket News Of The Day in tamil: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ விளையாட்டு செய்திகள் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய டாப் 5 கிரிக்கெட் விளையாட்டு செய்திகளை இங்கு பார்க்கலாம்.

Advertisment
  1. நடுவர்கள் மீது விமர்சனம்: சுப்மன் கில்லுக்கு முன்னாள் ஆஸி,. வீரர்கள் கடும் கண்டனம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய தொடக்க வீரரான சுப்மன் கில் ஆட்டமிழந்தது தொடர்பாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, நடுவர்களை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கில் ட்வீட் செய்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், போட்டிக் கட்டணத்தில் இருந்து அவருக்கு 15% அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கில் சர்ச்சைக்குரிய ட்வீட்டைப் பதிவு செய்ததற்காக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், "இது நவீன கிரிக்கெட் வீரருக்கு இப்போது உள்ள சவால்களில் ஒன்று. பல சமூக ஊடகங்கள் உள்ளன. கில் ட்வீட் சற்று பொறுப்பற்றது என்று நான் நினைக்கிறேன். அதேநேரத்தில் அவரது அனுபவமின்மையைக் காட்டுகிறது. இது நாம் சமூக ஊடகங்களுடன் வாழும் உலகம்." என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், கில்லின் ட்வீட் நடுவர்களை நேரடியாக தாக்குவதாகவும், அவர் தனது சமூக வலைதள பதிவுக்காக அபராதம் அல்லது இடைநீக்கத்தை சந்திக்க நேரிடும் என்றும் கூறினார்.

"நிச்சயமாக ஏதாவது வரப்போகிறது. ஒருவித அபராதம் அல்லது இடைநீக்கம் கூட இருக்கலாம். அது அவர்கள் எடுத்த முடிவிற்கு நடுவரிடம் நேரடியான விரிசல். நீங்கள் அதை செய்ய முடியாது. உலகமே அவருக்காக அதைச் செய்யப் போகிறது. இந்த விஷயத்தில் அவர் ஒரு வார்த்தையும் சொல்லத் தேவையில்லை." என்று கூறியுள்ளார்.

  1. ரோகித் பேச்சு: உடன்படாத ஆஸி,. கேப்டன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியை மூன்று போட்டிகள் கொண்ட தொடராகவும், இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐ.பி.எல்) ஒரு வாரத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியை திட்டமிடவும் வேண்டும் என்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இந்நிலையில், அவரது கருத்துக்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் உடன்படவில்லை.

World Test Championship

கரோகித் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது போன்ற ஒரு பெரிய போட்டியில், நீங்கள் இரு அணிகளுக்கும் நியாயமான வாய்ப்புகளைப் பெற வேண்டும். உங்களுக்குத் தெரியும், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நன்றாக இருக்கும்,.ஆனால் அது பொருந்தக்கூடிய அட்டவணையைக் கண்டுபிடிப்பது பற்றியது." என்று கூறினார்.

இதுகுறித்து ஆரோன் ஃபின்ச் பேசுகையில், "இது திட்டமிடலின் யதார்த்தம் மற்றும் இந்த நேரத்தில் பொருத்தப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள் என்று நான் நினைக்கிறேன். இதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, மூன்று டெஸ்டுகளில் அது இழுக்கப்பட்டால், ஒரு அணி பெரிய இழப்பை சந்தித்தால் என்ன ஆகும்? இது சிறிது நேரத்தை வீணடிப்பதாக மாறும். நாம் அனைவரும் வெற்றி மற்றும் தோல்விக்காக விளையாடுகிறோம். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை." என்று கூறியுள்ளார்.

  1. 'பாபர் அசாமை பார்த்து இந்திய டாப் ஆர்டர் கற்க வேண்டும்': இங்கி,. கேப்டன் கருத்து

இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோரிடம் ஸ்விங் மற்றும் சீம் பந்துகளை எப்படி விளையாடுவது என்பது குறித்து ஓரிரு விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

WTC final

ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய நாசர் உசேன் "இந்திய பேட்டர்கள் மீது உண்மையில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அவர்களின் ரசிகர்கள் இதைச் சொன்னதற்காக என்னைப் பின்தொடரலாம், ஆனால் பந்து நகரும் போது வேகப்பந்து வீச்சாளர்களை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து இந்திய டாப் ஆர்டர் பாபர் மற்றும் கேனைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இருவரும் அதை மிகவும் தாமதமாக செய்கிறார்கள், ”என்று அவர் கூறியுள்ளார்.

  1. அக்டோபர் 15ல் இந்தியா- பாகிஸ்தான் மோதல்

இந்திய மண்ணில் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் வரைவு போட்டி அட்டவணையை பிசிசிஐ ஐசிசி-க்கு அனுப்பியுள்ளது.

publive-image

இதன்படி, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அகமதாபாத்தில் தற்போதைய சாம்பியன் இங்கிலாந்து நியூசிலாந்தை தொடக்க ஆட்டத்தில் எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இறுதிப் போட்டியும் அங்கே நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  1. ஜிம்பாப்வேயில் தரையில் அமர்ந்த இலங்கை வீரர்கள்
publive-image

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், ஒட்டலில் தங்களுக்கு அறைகள் ஒதுக்கப்படாததால், தரையில் அமர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்களை இலங்கை கிரிக்கெட் வீரர் மஹிஷ் தீக்ஷனா தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வேறொரு நாட்டு கிரிக்கெட் அணி ஓட்டலில் இருந்ததால் தாமதம் ஏற்பட்டதாகவும், பிரச்சனை சரி செய்யப்பட்டதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment