TRICHY vs NRK Highlights: அதிரடி காட்டிய நெல்லை அணி - திருச்சியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி

இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TRICHY vs NRK LIVE CRICKET SCORE Nellai Royal Kings vs Trichy Grand Cholas 3rd Match Coimbatore Tamil News

ஐ.பி.எல் 2025: நெல்லை ராயல் கிங்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழஸ், 3வது போட்டி - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், கோயம்புத்தூர்.

9-வது டி.என்.பி.எல். டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் தொடங்கி நடக்கிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த வாரங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஜூலை 6 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

Advertisment

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடக்கிறது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கி நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் -  திருச்சி கிராண்ட் சோழஸ் மோதின.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, திருச்சி கிராண்ட் சோழஸ் பேட்டிங் ஆடி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய சுஜய் சிவசங்கரன் - ஜெயராமன் சுரேஷ் குமார் ஜோடியில் கேப்டன் ஜெயராமன் 9 ரன்னுக்கு அவுட் ஆனார். இதேபோல் ஒரு பவுண்டரியை விரட்டிய சுஜய் சிவசங்கரன் 12 ரன்னுக்கு அவுட் ஆனார். 

9 ஓவர்கள் நிறைவில் திருச்சி அணி 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. வாசிம் அகமது 22 பந்துகளில் 20 ரன்களுடனும், ஜாபர் ஜமால் 8 பந்துகளில் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Advertisment
Advertisements

10-வது ஓவர் முடிவில் திருச்சி அணி 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வாசிம் அகமது 23 பந்துகளில் 21 ரன்களுடனும், ஜாபர் ஜமால் 13 பந்துகளில் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். என்.எஸ். ஹரிஷ் வீசிய இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.

11-வது ஓவரில் சச்சின் ரதி பந்துவீச வந்தார். இந்த ஓவரில் வாசிம் அகமது தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் பந்திலேயே லாங்-ஆஃப் திசையில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை விளாசினார். அடுத்த பந்தில் தேர்ட் மேன் திசையில் ஒரு சிறப்பான பவுண்டரியை அடித்தார். இந்த ஓவரில் வாசிம் அகமதுவின் அதிரடியால் மொத்தமாக 12 ரன்கள் எடுக்கப்பட்டது. 11 ஓவர் முடிவில் திருச்சி அணி 74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வாசிம் அகமது 27 பந்துகளில் 32 ரன்களுடனும், ஜாபர் ஜமால் 15 பந்துகளில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

12-வது ஓவரை வி. யுதிஸ்வரன் வீசினார். இந்த ஓவரில் ஜாபர் ஜமால் டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு சிக்ஸர் அடித்தார். வாசிம் அகமதுவும் டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் வந்தன. 12 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 86 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வாசிம் அகமது 30 பந்துகளில் 37 ரன்களுடனும், ஜாபர் ஜமால் 18 பந்துகளில் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

13-வது ஓவரை என்.எஸ். ஹரிஷ் வீசினார். இந்த ஓவரின் 12.2வது பந்தில் வாசிம் அகமது (41 ரன்கள், 32 பந்துகள், 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் திருச்சி அணி 92 ரன்களுக்கு 3வது விக்கெட்டை இழந்தது.  அடுத்ததாக சஞ்சய் யாதவ் களமிறங்கினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே வந்தன. 

14-வது ஓவரை உதய் குமார் வீசினார். ஜாபர் ஜமால் இந்த ஓவரில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸர் விளாசி அணியின் ஸ்கோரை 100 ரன்களைத் தாண்ட வைத்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டன. 14 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஜாபர் ஜமால் 26 பந்துகளில் 25 ரன்களுடனும், சஞ்சய் யாதவ் 2 பந்துகளில் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

15-வது ஓவரை சோனு யாதவ் வீசினார். இந்த ஓவரில் சஞ்சய் யாதவ் ஒரு பவுண்டரி அடித்தார், ஜாபர் ஜமால் ஒரு சிக்ஸர் அடித்தார். இந்த ஓவரில் மொத்தமாக 12 ரன்கள் சேர்க்கப்பட்டன. 15 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 112 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஜாபர் ஜமால் 28 பந்துகளில் 32 ரன்களுடனும், சஞ்சய் யாதவ் 6 பந்துகளில் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

16-வது ஓவரை உதய் குமார் வீசினார். இந்த ஓவரின் 15.5வது பந்தில் சஞ்சய் யாதவ் (8 ரன்கள், 7 பந்துகள், 1 பவுண்டரி) ரன் அவுட் ஆனார். இதனால் திருச்சி அணி 120 ரன்களுக்கு 4வது விக்கெட்டை இழந்தது. அடுத்ததாக, ஆர். ராஜ்குமார் களமிறங்கினார். இந்த ஓவரில் 8 ரன்கள் வந்தன. 

17-வது ஓவரை வி. யுதிஸ்வரன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ஜாபர் ஜமால் (39 ரன்கள், 33 பந்துகள், 1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் திருச்சி அணி 120 ரன்களுக்கு 5வது விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, யு. முகிலேஷ் களமிறங்கினார். இந்த ஓவரில் மொத்தமாக 11 ரன்கள் வந்தன. 17 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆர். ராஜ்குமார் 6 பந்துகளில் 9 ரன்களுடனும், யு. முகிலேஷ் 1 பந்தில் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

18-வது ஓவரை உதய் குமார் வீசினார். இந்த ஓவரில் ஆர். ராஜ்குமார் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். இந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டன. 18 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆர். ராஜ்குமார் 11 பந்துகளில் 22 ரன்களுடனும், யு. முகிலேஷ் 2 பந்துகளில் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

19-வது ஓவரை வி. யுதிஸ்வரன் வீசினார். இந்த ஓவரில் ஆர். ராஜ்குமார் ஒரு சிக்ஸர் அடித்து மேலும் ரன்களை சேர்த்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் வந்தன. 19 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 155 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆர். ராஜ்குமார் 15 பந்துகளில் 29 ரன்களுடனும், யு. முகிலேஷ் 4 பந்துகளில் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

20-வது மற்றும் கடைசி ஓவரை சோனு யாதவ் வீசினார். இந்த ஓவர் திருச்சி அணிக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. இதன் முதல் பந்தில் முகிலேஷ் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில், ஆர். ராஜ்குமாரும் ஒரு ரன் எடுத்தார். ஆனால், அதற்கடுத்த பந்தில் முகிலேஷ் (5 ரன்கள், 6 பந்துகள்) பௌல்ட் ஆகி வெளியேறினார். அடுத்த பந்தில் சரவண குமார் (0 ரன், 1 பந்து) அருண் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதேபோல், அடுத்த பந்தில் கௌசிக் (0 ரன், 1 பந்து) என்.எஸ். ஹரிஷிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இதன் மூலம் 20-வது ஓவரில் சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி திருச்சி அணியை நிலைகுலையச் செய்தார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே வந்தன. 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. இதன் மூலம் நெல்லை அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நெல்லை அணியில் இருந்து அருண் கார்த்தி மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்தக் கூட்டணி, அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. அதன்படி, 21 பந்துகளில் 41 ரன்கள் விளாசிய அருண் கார்த்திக், கணேஷ் மூர்த்தி பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். 

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய அஜிதேஷ் குருசாமி 7 ரன்களிலும், ரிதிக் ஈஸ்வரன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் நெல்லை அணி சற்று தடுமாறியது. எனினும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 பந்துகளில் 45 ரன்களை சந்தோஷ் குமார் சேர்த்தார். ஆனால், அவரது விக்கெட்டை முகிலேஷ் கைப்பற்றினார்.

அடுத்ததாக களமிறங்கிய நிர்மல் குமார் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டையும் முகிலேஷ் வீழ்த்தினார். ஆனால், இறுதியாக கரம் கோர்த்த ஹரிஷ் மற்றும் சோனு யாதவ் ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை நெல்லை அணி குவித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: 

நெல்லை ராயல் கிங்ஸ்: அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசுவாமி, என்எஸ் ஹரிஷ், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), சோனு யாதவ், பிஎஸ் நிர்மல் குமார், முகமது அத்னான் கான், சச்சின் ரதி, வள்ளியப்பன் யுதீஸ்வரன், இம்மானுவேல் செரியன், உதய் குமார் எம்.

திருச்சி கிராண்ட் சோழர்கள்: ஜெயராமன் சுரேஷ் குமார் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), வசீம் அகமது, சுஜய் சிவசங்கரன், யு முகிலேஷ், சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால், ஜெகதீசன் கவுசிக், ஆர் ராஜ்குமார், பி சரவண குமார், வி அதிசயராஜ் டேவிட்சன், என் செல்வ குமரன்.

Tnpl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: