U-19 WC: இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்… யார் இந்த மனவ் பராக்…?
Tamilnadu’s Manav named in India squad for U-19 World Cup Tamil News: வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த மனவ் பராக்கும் என்கிற இளம் வீரர் இடம்பிடித்துள்ளார்.
Tamilnadu’s Manav named in India squad for U-19 World Cup Tamil News: வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த மனவ் பராக்கும் என்கிற இளம் வீரர் இடம்பிடித்துள்ளார்.
Tamilnadu cricketer Manav Parakh Tamil News: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அரங்கேறும் இந்த உலகக் கோப்பை தொடர் ஜனவரி 14ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்க உள்ளன.
Advertisment
மொத்தம் 48 போட்டிகளை கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணியை யாஷ் துல் என்ற இளம் வீரர் வழிநடத்துகிறார். அவருடன் இணைந்து செயலாற்றும் துணை கேப்டனாக எஸ்.கே.ரஷீத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த மனவ் பராக்கும் என்கிற இளம் வீரர் இடம்பிடித்துள்ளார்.
Advertisment
Advertisements
18 வயதான மனவ் பராக் சென்னையில் பிறந்தவர். இடதுகை பேட்டிங், வலது கை ஆப்-பிரேக் வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் வீரர். தமிழக அணி மற்றும் டிஎன்பிஎல் தொடருக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிலும் இவர் விளையாடியவர். தற்போது இவர் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார்.
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2000, 2008, 2012 மற்றும் 2018 என நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“