11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று (அக். 22) இரவு 9 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோதாஸ் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதியது.
இந்த சீசனில் நேற்று திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி.யை 28-23 என்கிற கணக்கில் வீழ்த்தி கையுடன் உ.பி.யோதாஸ் அணி இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. பெங்களூரு புல்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் 32-36 என்ற புள்ளிக்கணக்கில் அக்டோபர் 20 அன்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது.
இந்நிலையில், 11-வது புரோ கபடி லீக் தொடரில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் இடையே நடைபெற்றது. .
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்க செலுத்திய உ.பி. யோத்தாஸ் அணி, எதிர் அணியான பெங்களூரு புல்ஸ் அணி வீரர்களை வெளியேற்றுவதில் தீவிரமாக இருந்தது. ஆட்ட நேர முடிவில், உ.பி. யோத்தாஸ் அணி 57- 36 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில் உ.பி யோதாஸ் 15 முறை பெங்களூரு புல்ஸை எதிர்கொண்டுள்ளது. உ.பி யோதாஸ் அணிக்கு எதிரான 9 வெற்றிகளுடன், பெங்களூரு புல்ஸ் அணி நேருக்கு நேர் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் உ.பி யோதாஸ் 6 முறை வெற்றி பெற்றுள்ளது.
கடைசியாக உ.பி யோதாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், உ.பி யோதாஸ் அணி 34-33 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“