India vs England 3rd Test Rajkot | Sarfraz Khan: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று வியாழக்கிழமை (பிப்.15) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டுள்ளனர். தனது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் சர்பராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியின் தொப்பியை முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்திய அணி வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதன்பின்னர், சர்பராஸ் கான் இந்திய அணியுடன் தொப்பியுடன், மைதானத்தில் தனது அறிமுகத்தை காண நின்று கொண்டிருந்த தனது தந்தையிடம் காட்டினார். அப்போது தொப்பியை பெற்றுக் கொண்ட சர்பராஸ் கான் தந்தை அவரது கட்டிப்பிடித்து ஆரத் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். மேலும், தொப்பியை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் அவருக்காக ஆனந்த கண்ணீர் வடித்தார். இது தொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சர்பராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ரன்களை குவித்து வருகிறார். இருப்பினும், அவருக்கான டெஸ்ட் அறிமுகக் கதவு திறக்கப்படவில்லை. அவர் பலமுறை ஓங்கித் தட்டியும் திறக்கப்படவேயில்லை. நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு அவரது கனவு இன்று ராஜ்கோட்டில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நனவாகியது.
சர்பராஸ் கானின் மாபெரும் கனவை நனவாக்கியவர் அவரது தந்தை நௌஷாத் கான். 2014 ஆம் ஆண்டில், அவரது மூத்த மகன் சர்பராஸ் கான் தனது இந்திய ஜூனியர் அணி அறிமுகம் பெற்றார். அப்போது 8 வயதாக இருந்த இளைய மகன் முஷீர் கான் அண்மையில் நடந்து முடிந்த ஜூனியர் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் பேசிய நௌஷாத் கான் தனது மகன்களின் கிரிக்கெட் பயணத்தைப் பற்றி பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
பல ஆண்டுகளாக, நௌஷாத் த்ரோ-டவுன்களில் பல மணிநேரம் செலவழித்துள்ளார், மேலும் போட்டிகளை விளையாடுவதற்காக தனது மகன்களுடன் நாடு முழுவதும் பயணம் செய்துள்ளார். அந்தப் பயணத்தைப் பற்றிப் பேசும்போது அவரால் ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.
"அவர்கள் இருவரிடமும் தந்தை வேண்டுமா அல்லது நல்ல பயிற்சியாளர் வேண்டுமா என்று நான் சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். நான் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் பையன். என்னைப் பொறுத்தவரை நேரம் பொன் போன்றது. பணம். நான் அதிகாலையில் எழுந்து, சரியான நேரத்தில் தூங்குகிறேன். குடும்ப விழாக்களுக்கு செல்வதை தவிர்க்கிறேன். நான் பல ஆண்டுகளாக இந்த வழக்கத்தை பின்பற்றி வருகிறேன், ஒரே காரணம் காலையில் அவர்கள் (அவரது மகன்கள்) தங்கள் பயிற்சியை தவறவிடக்கூடாது.
சில சமயங்களில் நான் எனது மகன்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக பலரும் என்னிடம் கூறியுள்ளார்கள். அவர்கள் இந்தியாவுக்காக விளையாட விரும்பினால், அவர்கள் வலுவான விருப்பத்துடன் இருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்த டெஸ்ட் தொடருக்கான வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, "சர்பராஸ் கான் அறிமுகமானதைக் காண நீண்ட நாள் காத்திருந்தீர்களா?" என்று நௌஷாத் கானிடம் கேட்கிறார். அதற்கு அவர், "இரவு கடக்க நேரம் எடுக்கும், என் விருப்பப்படி சூரியன் உதிக்கப் போவதில்லை" என்று கவித்துவமாக பதில் கூறினார் நௌஷாத் கான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“