Vijay Hazare Trophy 2022 – Ruturaj Gaikwad Tamil News: 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்காக கடந்த 30ந் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் கர்நாடகா – சவுராஷ்டிரா அணிகளும், மகாராஷ்டிரா – அசாம் அணிகளும் மோதின. இதில் சவுராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பை தொடருக்காக, குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா – மகாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இறுதிப்போட்டியிலும் சதமடித்து மிரட்டிய கேப்டன் ருத்து

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்தது. இதில் அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ருதுராஜ் கெய்க்வாட் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 131 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட 108 ரன்கள் குவித்து அசத்தினார்.
மகாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காலிறுதியில் 220*(159) ரன்களும், அரையிறுதியில் 168(126) ரன்களும் குவித்து இருந்தார். இந்த நிலையில் இறுதிப் போட்டியிலும் 108 (131) ரன்கள் எடுத்து மிரட்டியுள்ளார்.
தவிர, விஜய் ஹசாரே தொடரின் 10 போட்டிகளில் 8 சதங்களுடன் 1,263 ரன்கள் குவித்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
2⃣2⃣0⃣* in Quarterfinal
— BCCI Domestic (@BCCIdomestic) December 2, 2022
1⃣6⃣8⃣ in Semi-final
💯 up & going strong in the #Final
What a sensational run of form this has been for Maharashtra captain @Ruutu1331! 🙌 🙌
Follow the match 👉 https://t.co/CGhKsFzC4g #VijayHazareTrophy | #SAUvMAH | @mastercardindia pic.twitter.com/jbgdg3O1Eu
மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்துள்ளது. இதனால், சவுராஷ்டிரா அணிக்கு 249 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பந்துவீச்சில் சவுராஷ்டிரா அணி தரப்பில் அதிகபட்சமாக சிராக் ஜானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
249 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் விஜய் ஹசாரே டிராபி சாம்பியன்ஸ் 2022 பட்டத்தை வென்றது.
சவுராஷ்டிரா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஷெல்டன் ஜாக்சன் 136 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் விளாசி 133 குவித்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil