/indian-express-tamil/media/media_files/YTXpYPLuRHtimAq7nFAs.jpg)
விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு - பெங்கால் அணிகள் மோதல்
vijay-hazare-trophy | tamilnadu-cricket-team: 22-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு, ஜெய்ப்பூர், ஆமதாபாத், சண்டிகார், மும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகளில் இருந்து வெற்றி பெறும் 2 அணிகள் கால்இறுதியை எட்டும்.
இந்நிலையில், மும்பையில் நடந்த 'இ' பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சுதீப் குமார் கராமி தலைமையிலான பெங்கால் அணி 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாபாஸ் அகமது 20 ரன்கள் எடுத்தார்.
தமிழ்நாடு அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட்டையும், நடராஜன், பாபா அபராஜித் தலா 2 விக்கெட்டையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
85 ரன்கள் கொண்ட எளிய வெற்றி இலக்கை துரத்திய தமிழ்நாடு அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக என். ஜெகதீசன் 30 ரன்களை எடுத்தார்.
முன்னதாக, தமிழ்நாடு அணி கோவா அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.