Advertisment

ஒன் டே, டி20 போட்டிகளில் இருந்து திடீர் விலகல்: விராட் கோலி அறிவிப்பு

இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ஒயிட்-பால் போட்டிகளுக்கான தேர்வுக்கு கோலி தயாராக இருக்க மாட்டார்.

author-image
WebDesk
New Update
Virat Kohli takes break to sit out white ball games in South Africa tamil news

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழு வரும் நாட்களில் மூன்று வடிவங்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளது.

virat-kohli | indian-cricket-team: தென் ஆப்பிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது.  

Advertisment

இந்நிலையில், சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த இந்திய வீரரான விராட் கோலி, வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி முதல் டர்பனில் தொடங்கும் டி20 போட்டியுடன் இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ஒயிட்-பால் போட்டிகளுக்கான தேர்வுக்கு தயாராக இருக்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது. 

சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையை சிறப்பாக விளையாடி இருந்த கோலி, 11 இன்னிங்ஸில் 3 சதங்கள் உட்பட 765 ரன்கள் குவித்தார். போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஓய்வு எடுப்பது குறித்த தனது முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) கோலி தெரிவித்துள்ளார். இருப்பினும், கோலி டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறுவார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழு வரும் நாட்களில் மூன்று வடிவங்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளது. 

“அவர் (கோலி) பி.சி.சி.ஐ மற்றும் தேர்வாளர்களிடம் தனக்கு ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு தேவை என்றும், அடுத்து அவர் எப்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார் என்பது குறித்து அவர்களிடம் திரும்பப் பெறுவார் என்றும் தெரிவித்தார். இந்த நேரத்தில் அவர் ரெட்-பால் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று பி.சி.சி.ஐ-க்கு அறிவித்துள்ளார், அதாவது தென் ஆப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான தேர்வுக்கு அவர் தயாராக இருக்கிறார்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதல் டெஸ்ட் பாக்ஸிங் டே அன்று செஞ்சூரியனில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. 

கோலி தற்போது லண்டனில் விடுமுறையில் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக இடைவிடாத கிரிக்கெட் விளையாடிய அவர் செப்டம்பரில் உலகக் கோப்பைக்கு முன்பு கடைசியாக ஓய்வு எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மாவுடன் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வெடுத்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Virat Kohli Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment