Advertisment

IND v ENG: முதல் இரண்டு டெஸ்டில் இருந்து கோலி திடீர் விலகல்: ரசிகர்களுக்கு பி.சி.சி.ஐ முக்கிய வேண்டுகோள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Virat Kohli withdraws from first two Tests against England BCCI Tamil News

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Virat Kohli | BCCI: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 25ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

Advertisment

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அணிக்கு ரோகித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த அணியில் சீனியர் வீரரான விராட் கோலி இடம் பெற்றிருந்தார். 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி திடீரென விலகியுள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளதாகவும், இது குறித்து கோலி அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களிடம் பேசியதாகவும், அவருக்கு பதிலாக மாற்று வீரர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு:- 

“தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுமாறு விராட் கோலி பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

கேப்டன் ரோகித் சர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோரிடம் பேசிய விராட், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது முதன்மையான விஷயமாக இருக்கும் போது, ​​சில தனிப்பட்ட சூழ்நிலைகள் அவரது இருப்பையும் பிரிக்கப்படாத கவனத்தையும் கோருகின்றன என்று வலியுறுத்தினார்.

பிசிசிஐ அவரது முடிவை மதிக்கிறது மற்றும் வாரியம் மற்றும் அணி நிர்வாகம் நட்சத்திர பேட்டருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது மற்றும் டெஸ்ட் தொடரில் பாராட்டத்தக்க செயல்களை வழங்குவதற்கு மீதமுள்ள அணி உறுப்பினர்களின் திறன்களில் நம்பிக்கை உள்ளது.

இந்த நேரத்தில் விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மையை ஊகிக்க வேண்டாம் என்று ஊடகங்களையும் ரசிகர்களையும் பி.சி.சி.ஐ கேட்டுக்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் போது அவர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Virat Kohli withdraws from first two Tests against England due to personal reasons

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Virat Kohli Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment