நார்வே செஸ்: 5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்!
Indian chess Grandmaster Viswanathan Anand beated Norwegian chess Grandmaster Magnus Carlsen Tamil News: விஸ்வநாதன் ஆனந்த் 2017ம் ஆண்டுக்கு பிறகு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பெருமை பெற்றுள்ளார்.
Indian chess Grandmaster Viswanathan Anand beated Norwegian chess Grandmaster Magnus Carlsen Tamil News: விஸ்வநாதன் ஆனந்த் 2017ம் ஆண்டுக்கு பிறகு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பெருமை பெற்றுள்ளார்.
Viswanathan Anand Tamil News: செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். ‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் இவர் தனது 16 வயதிலேயே, அதிவேகமாக சதுரங்கக் காய்களை நகர்த்தி “மின்னல் சிறுவன்” என்கிற பட்டத்தைப் பெற்றவர். இவர் 2003 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பட்டத்தையும் வென்றெடுத்தார்.
Advertisment
14வது வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, 15 வயதில் ‘அனைத்துலக மாஸ்டர்' அந்தஸ்து, 18 வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்’, ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவராக இவர் இருக்கிறார். இந்த சாம்பியன் வீரருக்கு இந்திய அரசு அதன் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ மற்றும் ‘அர்ஜுனா விருது’ எனப் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ என மேலும் பல விருதுகளை விஸ்வநாதன் ஆனந்த் வென்றுள்ளார்.
Advertisment
Advertisements
5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்…
இப்படியாக உலக செஸ் அரங்கில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் விசுவநாதன் ஆனந்த், கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார்.
இந்நிலையியல், நார்வேயில் தற்போது நடைபெற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்று விளையாடி வருகிறார். அவர் இந்த தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை எதிர்கொண்ட நிலையில், ஆட்டத்தின் 43வது நகர்வின் போது கார்ல்சனை வீழ்த்தி சாய்த்தார்.
இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த் 2017ம் ஆண்டுக்கு பிறகு உலக சாம்பியனான கார்ல்சனை வீழ்த்திய பெருமை பெற்றுள்ளார். மேலும், இந்த தொடரில் அவர் 5 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்தார். தற்போது அவர் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் நிலையில், பிரெஞ்சு செஸ் கிராண்ட்மாஸ்டர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ்வை எதிர்கொள்ள இருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil