/indian-express-tamil/media/media_files/dKEx3qtgD925rwxDCyvZ.jpg)
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம், கர்நாடக போலீஸ் எனக்கூறி மோசடி செய்ய முயற்சி நடந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம், கர்நாடக போலீஸ் எனக்கூறி மோசடி செய்ய முயற்சி நடந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயற்சி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாமனார் ஆனந்தை தொடர்புகொண்டு வங்கிக் கணக்கு விவரங்களை மர்ம நபர்கள் கேட்டுள்ளனர். ஆனந்த் அளித்த புகாரில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் மாமனார் ஆனந்த் (81). இவர் சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருகிறார். அவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர், கர்நாடக போலீஸ் எனவும், உங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கர்நாடகாவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கார், சிலர் மீது மோதியுள்ளது எனப்பேசி வங்கிக் கணக்கு விபரங்களை கேட்டுள்ளார்
சுதாரித்துக்கொண்ட ஆனந்த், உடனடியாக சைபர் கிரைமில் புகாரளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.