'எந்த விவாதமும் இல்லை'; பாக்,. இந்தியா வரும்' - அடித்து கூறும் வாசிம் அக்ரம்
அகமதாபாத்தில் பாகிஸ்தான் உண்மையில் இந்தியாவுடன் விளையாடுமா இல்லையா என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை என முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் பாகிஸ்தான் உண்மையில் இந்தியாவுடன் விளையாடுமா இல்லையா என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை என முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் இன்னும் உறுதி செய்யாமல் இழுத்தடித்து வருகிறது.
Wasim Akram - ICC World Cup 2023 Tamil News: இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒருநாள் (50 ஓவர்) உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
Advertisment
இழுபறி
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாத வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி கிடையாது என இந்தியா முடிவு செய்தது. இதனால், 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்திய அணி நேரடி போட்டிகளில் விளையாடவில்லை. பாகிஸ்தானுடன் உறவு சீராக இல்லாததால் தற்போது கூட இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட மறுத்தது. ஆனால் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் மட்டும் பொதுவான இடத்தில் மோதுகின்றன. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் இன்னும் உறுதி செய்யாமல் இழுத்தடித்து வருகிறது.
Advertisment
Advertisements
வாசிம் அக்ரம் பேச்சு
இந்நிலையில், அகமதாபாத்தில் பாகிஸ்தான் உண்மையில் இந்தியாவுடன் விளையாடுமா இல்லையா என்பது குறித்து எந்த விவாதமும் இல்லை என்றும், பாகிஸ்தான் இந்தியா நிச்சயம் வரும் என்றும் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் 1992 உலகக் கோப்பை வென்றவருமான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பாகிஸ்தான் எங்கு விளையாட ஒதுக்கப்பட்டாலும் விளையாடும். எளிமையானது. ‘நாங்கள் அகமதாபாத்தில் விளையாட மாட்டோம்’ என்பது தேவையற்ற மன அழுத்தம். பாகிஸ்தான் வீரர்களை நீங்கள் வேண்டுமென்றால் கேட்டுப் பாருங்கள், போட்டி எங்கு வந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை.
"நான் எல்லாம் ஈகோவுக்காக இருக்கிறேன். உங்களுக்கு ஈகோ இருந்தால், நடப்பது தவறு என்று புரிந்து கொண்டு பேசுங்கள். ஆனால் அதிலிருந்து மீண்டும் கடந்து செல்லுங்கள். எப்பொழுதும் திட்டமிடுங்கள், அதைச் செய்ய முடியுமா என்று எப்போதும் சிந்தியுங்கள்? நமது திட்டமிட்டதை முடிக்க முடியுமா? நம்மால் முடியவில்லை என்றால், இதை செய்யாதீர்கள். அது சிரிப்புக்கு ஒரு காரணமாக முடிகிறது. நாம் அனைவரும் நம் நாட்டுக்காக தேசபக்தர்கள். மேலும் அவர்கள் தங்கள் நாட்டுக்காக இருப்பார்கள். அது பற்றி எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் முடிவில், இது ஒரு விளையாட்டு மட்டுமே. அரசாங்கங்கள் ஒருவருக்கொருவர் பேசுவார்கள். அது அவர்களின் பிரச்சனை, ”என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் இருக்கும் என்று கேள்விப்பட்டபோது, நான் சிரித்துக் கொண்டேன் - 'நாங்கள் இந்தியாவுக்கு வராமல் இருக்க இது ஒரு வழி'. அதாவது நீங்கள் சென்னை அல்லது கொல்கத்தா என்று சொன்னால், அது அர்த்தமுள்ளதாக இருக்கும்." என்று கூறினார்.
உலகக் கோப்பை வரைவு அட்டவணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாதுகாப்பு சிக்கல்களை காரணம் காட்டி மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட விரும்பவில்லை எனவும், சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கும் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதில் ஒரு கோரிக்கை ஐ.சி.சி-யால் பரிசீலிக்கப்பட்டும், மற்றொன்று மறுக்கப்பட்டது. இதன்படி, பாகிஸ்தானின் லீக் போட்டிகள் எதுவும் மும்பையில் விளையாடப்படாது. ஒருவேளை, பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் மும்பையில் திட்டமிடப்பட்ட போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனுக்கு மாற்றப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil