Advertisment

கிராண்ட்மாஸ்டரை சாய்த்த 8 வயது இந்திய வம்சாவளி சிறுவன்: யார் இந்த அஸ்வத் கவுசிக்?

பர்க்டார்ஃபர் ஸ்டாட்ஹவுஸ் ஓபன் செஸ் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த 8 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அஷ்வத் கவுசிக், போலந்து செஸ் கிராண்ட்மாஸ்டர் ஜசெக் ஸ்டோபாவை வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

author-image
WebDesk
New Update
Who is Ashwath Kaushik 8 year old Indian origin boy defeated Polish chess grandmaster Jacek Stopa Tamil News

சிறுவன் அஷ்வத் கவுசிக் இந்தியாவில் பிறந்தாலும் கடந்த 6 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவிட்சர்லாந்து நாட்டில் பர்க்டார்ஃபர் ஸ்டாட்ஹவுஸ் ஓபன் செஸ் போட்டிகள் நடைப்பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த 8 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அஷ்வத் கவுசிக், போலந்து செஸ் கிராண்ட்மாஸ்டர் ஜசெக் ஸ்டோபாவை வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்த சாதனையின் மூலம், செஸ் விளையாட்டின் கிளாசிக்கல் பதிப்பில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் வீரர் என்கிற சாதனையை சிறுவன் அஷ்வத் கவுசிக் படைத்துள்ளார். 

Advertisment

முன்னதாக, இந்த சாதனையை செர்பியாவின் லியோனிட் இவானோவிச் வைத்திருந்தார். அவருக்கு 8 வயது என்றாலும், கவுசிக்கை விட பல மாதங்கள் மூத்தவர். ஒரு வாரத்திற்கு முன்பு பெல்கிரேட் ஓபனில் 60 வயதான பல்கேரிய கிராண்ட்மாஸ்டர் மில்கோ பாப்சேவை செர்பியாவின் லியோனிட் இவானோவிச் வீழ்த்தி இருந்தார். 

நியூஸ் ஏசியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சிங்கப்பூரைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய வம்சாவளி சிறுவன் அஷ்வத் கவுசிக், 37 வயதான போலந்து செஸ் கிராண்ட்மாஸ்டர் ஜசெக் ஸ்டோபாவை தோற்கடித்துள்ளார். அதாவது, சிறுவன் அஷ்வத் கவுசிக்கை விட ஐந்து மடங்கு வயதில் மூத்தவரான ஜசெக் ஸ்டோபாவை வென்று சாதனை படைத்துள்ளார். 

சிறுவன் அஷ்வத் கவுசிக் இந்தியாவில் பிறந்தாலும் கடந்த 6 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு கிழக்கு ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப்பின் 8 வயதுக்குட்பட்ட பிரிவில் அவர் 6 வயதில் மூன்று தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதே ஆண்டில், அவர் வயது வரம்பில், 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக ரேபிட் சாம்பியனாகவும் வாகை சூடியுள்ளார். 

"எனது ஆட்டம் மற்றும் நான் விளையாடிய விதம் குறித்து நான் பெருமையாக உணர்ந்தேன், குறிப்பாக ஒரு கட்டத்தில் நான் மோசமாக இருந்தேன், ஆனால் அதிலிருந்து மீண்டு வர முடிந்தது," என்று ஃபிடேவின் தரவரிசையில் உலகின் 37,338 வது இடத்தில் இருக்கும் சிறுவன் அஷ்வத் கவுசிக் கூறினார்.

பர்க்டார்ஃபர் ஸ்டாட்ஹவுஸ் ஓபன் செஸ் தொடரில் அஷ்வத் கவுசிக் இறுதியாக ஹாரி க்ரீவ்க்கு எதிராக தோற்று 12வது இடத்தில் போட்டியை முடித்தார். மேலும் செஸ்.காம் தகவல்படி (Chess.com) அடுத்த பட்டியலில் 84 ரேட்டிங் புள்ளிகளைப் பெற உள்ளார்.

அஷ்வத் கவுசிக் ஒரு நாளைக்கு 7 மணிநேரம் வரை செஸ்ஸில் செலவிடுகிறார். அவரது பழைய செஸ் திட்டத்தில் ஆயிரக்கணக்கான புதிர்களை தீர்க்கிறார். அவரது தந்தை கவுசிக் ஸ்ரீராம் தனது மகனுக்கு புகைப்பட நினைவாற்றல் இருப்பதை வெளிப்படுத்தினார், “அவர் நீண்ட சிக்கலான புதிர்களை பார்வைக்கு தீர்க்கிறார். அவர் கிராண்ட்மாஸ்டர் ஜேக்கப் ஆகார்டின் முழு கிராண்ட்மாஸ்டர் தொடரையும் சமீபத்தில் பலகையைப் பயன்படுத்தாமல் முடித்தார்." அவர் கூறியுள்ளார். 

சிங்கப்பூர் கிராண்ட்மாஸ்டரும் சிங்கப்பூர் செஸ் ஃபெடரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெவின் கோ, தனது எக்ஸ் பக்கத்தில் அஸ்வத்தின் சாதனையைப் பாராட்சியுள்ளார். “அப்பா மிகவும் ஆதரவானவர், பையன் அர்ப்பணிப்புள்ளவர், பள்ளி நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது மற்றும் நிச்சயமாக அவருக்கு இயல்பான திறமை உள்ளது.

பையன் வயதாகும்போது ஆர்வங்கள் மாறக்கூடும் என்பதால் அவர் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆனாலும், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவருக்கு 8 வயதே ஆவதால், அஷ்வத் இன்னும் போர்டின் மறுபக்கத்தை அடைய ஒரு பூஸ்டர் குஷன் தேவை. அஸ்வத்தின் வெற்றிக்கு அவரது பயணத்தில் பல பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காரணம் என்றும்" அவர் கூறியிருக்கிறார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Who is Ashwath Kaushik, the 8-year-old Indian origin boy who defeated a grandmaster?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chess
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment