Advertisment

சென்னை டெஸ்ட் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? விளக்கும் இந்திய மகளிர் அணி கேப்டன்

"ஒரு அணியாக, இது எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. இது சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்றாலும், எங்களுக்கு இங்கு அதிக அனுபவம் இல்லை." என்று இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Why Harmanpreet Kaur is looking forward to the Chennai experience ahead of one off Test against South Africa Tamil News

சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் பற்றி பேசிய தலைமை பயிற்சியாளர் அமோல் முசும்தார், 'வரலாற்று சிறப்புமிக்கது' என்று கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa: Why Harmanpreet Kaur is looking forward to the Chennai experience ahead of one-off Test against Proteas

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 525 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இரட்டை சதம் அடித்த  ஷபாலி வர்மா 205 ரன்களும், சதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா 149 ரன்களும் எடுத்தனர். ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு வழக்கும் போல் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கும். 

சென்னை டெஸ்ட் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? விளக்கும் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

டிசம்பர் 2022 முதல், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளை பெரும்பாலும் மும்பையிலும் அதைச் சுற்றி இருக்கும்  டி.ஒய்.பாட்டீல், பிரபோர்ன் மற்றும் வான்கடே போன்ற மைதானங்களில் மட்டுமே ஆடியது. தற்போதுவரை ஆடிய 11 டி20 போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும், இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சொந்த மண்ணில் நடந்தன. 

2023 இல் நடந்த மகளிர் பிரிமீயர் லீக் இன் தொடக்க சீசன் முற்றிலும் மும்பை மற்றும் நவி மும்பையில் விளையாடப்பட்டது. ஆனால் நிச்சயமாக, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வீராங்கனைகள், 2024ல் நடந்த மகளிர் பிரிமீயர் லீக்கில் பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற மைதானங்களில் ஆடிய அனுபவத்தைப் பெற்றனர். இதேபோல், பெங்களூரு மண்ணில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை ஆடிய அனுபவத்தையும் பெற்றனர். 

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை முதல், இந்தியப் பெண்கள் அணி அந்த பட்டியலில் மற்றொரு சிறப்புமிக்க இடமான சென்னையை இணைத்துள்ளனர். அடுத்த சில நாட்களில் அவர்கள் சேப்பாக்கத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இது அடுத்த ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் வெவ்வேறு மைதானங்களில் ஆடிய சிறப்பான அனுபவத்தை பெண்கள் அணிக்கு வழங்கும். 

இந்த டெஸ்ட் போட்டி பற்றி கடந்த புதன்கிழமை இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேசுகையில், "ஒரு அணியாக, இது எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. இது சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்றாலும், எங்களுக்கு இங்கு அதிக அனுபவம் இல்லை. ஆனால், இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், உலகக் கோப்பையில் விக்கெட் எப்படி நடந்துகொள்ளப் போகிறது, என்ன சேர்க்கைகளை நாம் தேடலாம் என்பதைப் பார்க்க இந்தத் தொடர் நிச்சயம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும் என்று நினைக்கிறேன். இந்த வாய்ப்பை நாங்கள் இரு கைகளாலும் பயன்படுத்துகிறோம். சென்னையில் விக்கெட்டுகள் எப்படி இருக்கின்றன, எங்கள் திறமைகளை எப்படி மேம்படுத்தலாம் என்பதை பார்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பு." என்று கூறினார். 

சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியம் பற்றி பேசிய தலைமை பயிற்சியாளர் அமோல் முசும்தார், 'வரலாற்று சிறப்புமிக்கது' என்று கூறினார். சென்னையில் கடைசியாக பெண்களுக்கான சர்வதேச போட்டிகள் பிப்ரவரி-மார்ச் 2007 இல் தான் நடந்தது. 1976 ஆம் ஆண்டு சென்னை பெண்கள் டெஸ்ட் போட்டியை நடத்திய காலத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்.

“மும்பையில் நடந்த கடைசி இரண்டு டெஸ்டிலும் ஆரம்பத்திலேயே திருப்பம் ஏற்பட்டது. இங்கே விக்கெட் பற்றி எங்களுக்கு அதிக தெளிவு இல்லை. நாங்கள் அங்கு சென்று ஆடுகளம் எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பார்க்க ஆலோசிக்கிறோம். 

எனக்கு டெஸ்ட் விளையாடிய அனுபவம் அதிகம் இல்லை, அங்குதான் அமோல் சார் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து முடிவெடுப்பதில் எனக்கு நிறைய உதவினார். நாங்கள் இங்கு ஆண்களுக்கான டெஸ்ட் போட்டிகளைப் பார்த்திருக்கிறோம், ஆனால் பெண்கள் கிரிக்கெட் வேகத்தின் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டது. நாங்கள் விளையாடத் தொடங்கியவுடன், நாங்கள் அனுபவத்தை சேகரிப்போம், ஊழியர்கள் எங்களுக்கு உதவுவார்கள்." இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

indian women cricket Harmanpreet Kaur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment