Advertisment

ஆசிய கோப்பை இல்லைனா உலகக் கோப்பையில் சந்தேகம்: சிக்கலில் ராகுல், ஸ்ரேயாஸ்

கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆசிய கோப்பையில் இந்திய அணியில் களமிறங்கவில்லை என்றால், உலகக் கோப்பையில் அவர்கள் இடம் பிடிக்க வாய்ப்புகள் குறைவுதான்.

author-image
WebDesk
New Update
World Cup chances slim if KL Rahul, Shreyas Iyer don’t make it to Asia Cup Tamil News

உடற்தகுதி தேர்வில் ராகுல் தேர்ச்சி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு இன்னும் உள்ளது என்றாலும், முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த ஸ்ரேயாஸ் ஐயரைச் சுற்றி நிச்சயமற்ற நிலை உள்ளது.

இந்திய மண்ணில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக்கு இன்னும் 54 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஆசிய கோப்பையில் கலந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இருவரும் உலகக் கோப்பையில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்பது தெரிய வந்துள்ளது. இந்த இரு வீரர்களும் தங்களின் காயத்தில் இருந்து மீண்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், மிடில்-ஆர்டரை தாங்கிப்பிடிக்க அவர்களுக்கு வழங்கப்படும் ஆட்ட நேரம் மற்றும் அவர்களின் ஃபார்ம் குறித்து கவலைகள் உள்ளன.

Advertisment

உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், ஐசிசி சாம்பியன் பட்ட தேடலை முடிவுக்குக் கொண்டு வர இந்திய நிர்வாகம் முயன்று வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்தியா தனது முழு வலிமையான அணியை களமிறக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களின் முதல் தேர்வு வீரர்களான ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சமீபத்திய மாதங்களில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டனர்.

இந்தியா தனது உண்மையான உலகக் கோப்பை அணியை களமிறக்க ஆசிய கோப்பையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்போட்டியானது ஆகஸ்ட் 30 அன்று தொடங்கும் நிலையில், ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் உடற்தகுதி மற்ற விருப்பங்களை முயற்சிக்க அணி நிர்வாகத்தை கட்டாயப்படுத்துகிறது.

கரீபியன் தீவுகளுக்குச் சென்ற தேர்வாளர்களின் தலைவர் அஜித் அகர்கர் வருகிற வெள்ளிக்கிழமை இந்தியா திரும்புகிறார். அதன்பின்னர் அடுத்த 48 மணி நேரத்தில் மீதமுள்ள தேர்வாளர்களுடன் கலந்துரையாடி இந்திய அணி குறித்த முடிவு செய்வார்.

பும்ராவும் கிருஷ்ணாவும் குணமடைந்து அயர்லாந்தில் டி20 போட்டிகளில் விளையாடுவார்கள் என்றாலும், ராகுலும், ஸ்ரேயாஸ் ஐயரும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை மற்றும் காலத்துக்கு எதிராக பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. இதனால், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பை தற்போதைக்கு தாமதப்படுத்தி வருகிறது.

வரவிருக்கும் நாட்களில் ராகுல் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டும். ஆகஸ்ட் 18 ஆம் தேதி அவர் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் அவரை ஆசிய கோப்பையில் சேர்ப்பதற்கான இறுதி முடிவை எடுக்கும்.

உடற்தகுதி தேர்வில் ராகுல் தேர்ச்சி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு இன்னும் உள்ளது என்றாலும், முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த ஸ்ரேயாஸ் ஐயரைச் சுற்றி நிச்சயமற்ற நிலை உள்ளது. அவர் காயத்தை ஆவதற்கு முன்பு 4-வது இடத்தைப் பிடித்திருந்ததால், கடந்த இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பைகளில் இல்லாத மிடில்-ஆர்டரில் ஸ்திரத்தன்மையைக் கொடுக்க இந்தியா அவரைப் பின்தொடர்கிறது.

WC 2023: KL Rahul and Rishabh Pant injuries

நம்பர். 4 புதிர்

ராகுல் குணமடையாத பட்சத்தில், திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மாற்றுத் வீரர்களாக கருதப்படுவதால், புதிய நம்பர்.4-ஐத் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதே பகுதியை நோக்கி இந்தியா செல்கிறது. இந்த நிலையில் சூரிகுமார் யாதவுடன் இந்தியா மேற்கொண்ட சோதனைகள் அனைத்தும் அவரது ஃபார்மில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளன.

ஃபிட்னஸ் தேர்வில் வெற்றி பெற்றால், அது அவர்களின் பெரிய பிரச்சனைகளில் ஒன்றையாவது தீர்க்கும் என்பதால், ராகுலைப் பற்றி இந்தியா நம்பிக்கை கொண்டிருக்கிறது. இல்லையெனில், இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் யாராவது ஒருவர் விக்கெட் கீப்பர்களாக களமிறங்க வேண்டும் என்பதற்காக பெரிய மறுசீரமைப்பிற்கு ஆளாக நேரிடும்.

அது இஷான் கிஷான் என்றால், இந்தியா அவர்களின் பேட்டிங் ஆர்டரையும் குழப்ப வேண்டியிருக்கும். தொடக்க ஆட்டக்காரரான அவர் 17 ஒருநாள் போட்டிகளில் 4வது இடத்தில் பேட்டிங் செய்து மிகக் குறைந்த சராசரியைக் கொண்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த மூன்று ஒருநாள் போட்டிகள், வங்கதேச அணிக்கு எதிராக 210 ரன்கள் எடுத்த பிறகு, தொடர்ந்து மூன்று இன்னிங்ஸ்களில் ஓப்பனிங் செய்யும் வாய்ப்பு கிஷானுக்கு கிடைத்த முதல் முறையாகும். அதனால் அவர் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்தார்.

ராகுல் ஆசிய கோப்பையில் களமிறங்கவில்லை என்றால், இந்தியா எப்படி நிலைமைக்கு செல்கிறது என்பது சுவாரஸ்யமாக இருக்கும். திலக் வர்மா அல்லது சூர்யகுமார் யாதவ் மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனை லெவன் அணியில் சேர்த்து 4 அல்லது 5வது இடத்தில் விளையாடுவது தான் ஒரே வழியாக இருக்கும். ஷுப்மான் கில் உடன் கிஷானை ஓப்பன் செய்து, கேப்டன் ரோஹித் ஷர்மாவை 4-வது இடத்தில் பேட் செய்ய வைப்பதை இந்தியா சிந்திக்கும் மற்றொரு விருப்பமாக உள்ளது. கடைசி நேரத்தில் இப்படிப்பட்ட மறுசீரமைப்பு ஒரு சீரற்ற பேட்டிங் ஆர்டருக்கு வழிவகுக்கும். மேலும் கேப்டனிடன் ரோஹித் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போகலாம். மேலும், விராட் கோலியுடன் இணைந்து 50 ஓவர்கள் முழுவதும் பேட் செய்யக்கூடிய ஒரே பேட்ஸ்மேனும் அவரே ஆவார்.

ராகுல் மீண்டும் உடற்தகுதி பெற்று ஆசியக் கோப்பையில் சேர்க்கப்பட்டால், அது இந்தியாவை இந்தத் தலைவலியில் இருந்து காப்பாற்றும், அப்போது அவர் திலக் வர்மா போன்ற ஒரு புதிய வீரரைக் கூட கொண்டு வர முடியும். அவர் இடது கை ஆட்டக்காரராக இருப்பதன் மூலம் சமநிலையைக் கொடுப்பார் மற்றும் ஃபார்மிலும் அவர் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. அவர் இதுவரை ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என்றாலும், அணி நிர்வாகம் விருப்பத்தைத் திறந்து வைத்திருப்பது நல்லது.

ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் விலக்கி வைக்க சூர்யகுமாரும் ஒரு போட்டியாளராக இருந்தாலும், அணி நிர்வாகம் காட்டிய நம்பிக்கையை அவர் இன்னும் நிதானப்படுத்தவில்லை. அது இப்போது அவரை 6 அல்லது 7 வது இடத்தில் பேட் செய்ய வைக்கிறது. அப்படியானால், இந்தியா ஹர்திக் பாண்டியாவை 5-வது இடத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் இந்தியா விரும்பும் தாக்கத்தை சூர்யகுமார் 6 அல்லது 7-வது இடத்தைப் பெறுவார் என்று நம்புலாம்.

பல நிச்சயமற்ற நிலைகள் இருப்பதால், ராகுலும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஆசியக் கோப்பையில் விளையாடாமல் போனால், அவர்களின் தந்திரோபாயங்கள் மற்றும் சேர்க்கைகளைச் சரிசெய்வதற்குப் போட்டியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியா அவர்களின் சோதனைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். அடுத்த ஒரு வாரத்தில் இந்தியாவின் தீர்க்கப்படாத கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும். அதுவரை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Kl Rahul Indian Cricket Worldcup Shreyas Iyer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment