உலககோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெற்றிக்கணக்கை துவக்கியுள்ளது.
உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ( ஜூன் 3ம் தேதி) நடந்த லீக் போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர், பவுலிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் நிதான ஆட்டம் : வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் அடைந்த தோல்வியை மறக்காத பாகிஸ்தான் அணியினர் பொறுப்புணர்வு அறிந்து நிதானமாக விளையாடினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்தனர். ஹபீஜ் 84 ரன்களும், பாபர் ஆசம் 63 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில், வோக்ஸ் மற்றும் மொயின் அலி தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
கடின இலக்கு : 349 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, துவக்க விக்கெட்களை ஆரம்பத்திலேயே பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் சுதாரித்துக்கொண்டது. இங்கிலாந்து அணியால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட்கள் இழப்பிற்கு 334 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், 14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஜோ ரூட் மற்றும் பட்லர் சதமடித்தபோதும், இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது, அதன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாகிஸ்தான் தரப்பில், வகாப் ரியாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
முற்றுப்புள்ளி : தொடர்ந்து 11 போட்டிகளில் அடைந்த தோல்விக்கு, இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதிகபட்ச ரன் : பாகிஸ்தான் அணியில் யாருமே சதமடிக்காத நிலையில், 348 ரன்கள் எடுத்தது. இதுவே, உலககோப்பை அரங்கில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும். இதற்கு முன்னர், 2015ல் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக தென் ஆப்ரிக்கா எடுத்த 341 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.