Advertisment

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: டெல்லி போலீசார் தாக்கியதால் பரபரப்பு

நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதால் டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Late-night chaos at Jantar Mantar as protesting wrestlers claim police manhandled them Tamil News

X There was chaos at Jantar Mantar late in the night on Wednesday as India’s top wrestlers, who have been protesting there for over a week, alleged that police had manhandled and abused them.

2023 Indian wrestlers' protest Tamil News: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், ஆளும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசில் புகார் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர். பிரிஜ் பூஷன் கைது செய்யப்படும் வரை போராட்ட களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

10 நாட்களுக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர்களான கபில்தேவ், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட தடகள வீரர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

போலீசார் தாக்குதல்

இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதால் ஜந்தர் மந்தரில் பரபரப்பு ஏற்பட்டது. மல்யுத்த வீரர்கள் போராட்ட இடத்திற்கு படுக்கைகளை கொண்டு வர முயன்றபோது மோதல் தொடங்கியுள்ளது.

காவல்துறையின் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டர். அதே நேரத்தில் வினேஷ் போகட் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அந்த இடத்தில் இருந்து வெளிவந்த வீடியோவில் காண முடிந்தது. குடிபோதையில் ஒரு போலீஸ்காரர் தனது சகோதரனை தாக்கியதாக வினேஷ் குற்றம் சாட்டினார். மற்றொரு போலீஸ் அதிகாரி தன்னையும் சங்கீதா போகத்தையும் தள்ளிவிட்டதாக அவர் கூறினார்.

“இன்று மழை பெய்ததால், தெருக்கள் ஈரமாக உள்ளன. அதனால்தான் நாங்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு படுக்கையை கொண்டு செல்ல முயற்சித்தோம். அப்போது அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் மகள்களை இப்படித்தான் மதிப்பார்களாக?” என்று டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், டெல்லி போலீஸ் அதிகாரிகள், போலீஸ் அதிகாரி குடிபோதையில் இல்லை என்றும், போராட்டக்காரர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

“போராட்டம் நடக்கும் இடத்திற்கு கட்டில்களை கொண்டு வர சில வீரர்கள் முயன்றனர். இதுபற்றி போலீசார் அவர்களிடம் கேட்டபோது, ​​அவர்கள் ஆக்ரோஷமாகி, போராட்டக்காரர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் ஒரு போலீஸ்காரரை தவறாகக் கட்டுப்படுத்தினர் மற்றும் அவர் குடிபோதையில் இருப்பதாக குற்றம் சாட்டினார்கள். இது உண்மையல்ல. மற்ற அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. எந்த போராட்டக்காரரும் தாக்கப்படவில்லை." என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையில், ஆம் ஆத்மி மந்திரி சவுரப் பரத்வாஜ், எல்-ஜி விகே சக்சேனாவை ஒரு ட்வீட்டில் டேக் செய்து, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் வீடியோவைக் கவனிக்கும்படி கேட்டுக் கொண்டார். "டெல்லி லெப்டினன்ட் கவர்னர் பார்வைக்கு, ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரரை டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கினார். போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவரின் எம்.எல்.சி.யும் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று அவர் தனது ட்வீட்டில் டெல்லி போலீஸ் கமிஷனரை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களுக்கு மடிக்கக்கூடிய கட்டில்களை கோரியதற்காக டெல்லி காவல்துறையால் தன்னை கைது செய்ததாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புது டெல்லியின் டிசிபி பிரணவ் தயல் கூறுகையில், ”ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது, ​​அனுமதியின்றி மடிந்த படுக்கைகளுடன் சோம்நாத் பார்தி போராட்ட இடத்திற்கு வந்தார். தலையீட்டின் பேரில், ஆதரவாளர்கள் ஆக்ரோஷமாகி, டிரக்கிலிருந்து படுக்கைகளை வெளியே எடுக்க முயன்றனர். அதைத் தொடர்ந்து, ஒரு சிறிய தகராறு ஏற்பட்டது. அதில் சோம்நாத் பார்தி மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்." என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment