மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்திய டீமில் பல மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.
அதில் ரித்திமான் சஹாவும் ஒருவர். இவர், விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கை சிறப்பாக செய்யக் கூடியவர். நியூசிலாந்து டெஸ்டில் அவ்வளவாக சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், இவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். ஓய்வு குறித்து சிந்திக்குமாறு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாக அவர் தெரிவித்தார்.
கான்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்துக்கு பிறகு உங்களது இடத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி என்னிடம் உறுதி அளித்தார் என்றும் ரித்திமான் சஹா கூறினார்.
இதையடுத்து, அவர் செய்தியாளர் ஒருவரிடம் இருந்த பெறப்பட்ட வாட்ஸாப் மெசேஜை சமூக வலைதளமான டிவிட்டரில் பகிர்ந்தார்.
After all of my contributions to Indian cricket..this is what I face from a so called “Respected” journalist! This is where the journalism has gone. pic.twitter.com/woVyq1sOZX
— Wriddhiman Saha (@Wriddhipops) February 19, 2022
அதில் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு நான் அளித்த பங்களிப்புகள் அனைத்திற்கும் பிறகு.. "மதிப்பிற்குரிய" பத்திரிக்கையாளரிடம் இருந்து நான் எதிர்கொள்வது இதுதான்! ஊடகங்கள் இப்படி ஆகிவிட்டன என்று ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
இன்று கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் தெரியுமா?
அந்த ஸ்கிரீன் ஷாட்டில் யார் சிறந்த விக்கெட் கீப்பரோ அவர்களில் ஒருவரை அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். நீங்கள் சிறப்பற்ற 11 செய்தியாளர்களை தேர்வு செய்ய முயற்சி செய்கிறீர்கள். யார் உண்மையில் உதவுவார்களோ அவர்களை தேர்வு செய்யுங்கள் என்று அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ரித்திமான் சஹாவின் ட்வீட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் பதில் ட்வீட் செய்துள்ளார்.
Extremely sad. Such sense of entitlement, neither is he respected nor a journalist, just chamchagiri.
With you Wriddhi. https://t.co/A4z47oFtlD— Virender Sehwag (@virendersehwag) February 20, 2022
அதில், மிகவும் சோகமாக இருக்கிறது. அவர் செய்தியாளரோ மதிக்கப்பட கூடியவரோ கிடையாது. அவர் ஒரு அடிவருடி. நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.