ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபாவில் ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் இன்று டிராவில் முடிந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - இந்தியா எப்படி தகுதி பெறலாம்?
இந்த நிலையில், பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது பார்டர்-கவாஸ்கர் டிராபி மோதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டிராவுக்குப் பிறகு, இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தங்கள் புள்ளி சதவீதத்தை (பி.சி.டி) இழந்துள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்தியாவின் புள்ளிகள் 57.29 என இருந்த சூழலில், தற்போது 55.88 ஆக சரிந்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 58.89 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணி 63.33 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது.
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால், அவர்கள் 138 புள்ளிகள் மற்றும் 60.52 புள்ளிகள் என முடிப்பார்கள். அப்படி நடந்தால் இறுதிப் போட்டிக்கான பந்தயத்திலிருந்து ஆஸ்திரேலியாவை வெளியேற்றும்.
மீதமுள்ள ஆட்டங்களில் இந்தியா ஒரு போட்டியில் வென்று மற்றொரு ஆட்டத்தை டிரா செய்தால், 130 புள்ளிகள் மற்றும் 57.01 புள்ளிகள் என முடிப்பார்கள். அப்படி நடந்து, ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம்.
இந்தியா ஆஸ்திரேலியாவை 2-2 என சமன் செய்தால், 126 புள்ளிகள் மற்றும் 55.26 புள்ளிகள் என முடிப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் ஆஸ்திரேலியா, இலங்கையில் குறைந்தபட்சம் ஒரு வெற்றியைப் பெற்றால், ஆஸ்திரேலியா இந்தியாவை விட முன்னேற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“