/tamil-ie/media/media_files/uploads/2022/01/tricy.jpeg)
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து பயிற்சி வகுப்பிற்காக கல்லூரிக்கு திரும்பினர்.
பெரும்பாலான மாணவர்கள வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவதால், அனைவரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து பிறகே அனுமதிப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, என்.ஐ.டி., வந்த 577 மாணவ - மாணவியருக்கு நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில், 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேரும், என்.ஐ.டி., வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், அவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறிய, மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய என்ஐடியின் பொறுப்பு இயக்குனர் ஜி கண்ணபிரான், "மாணவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளது.மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடிவகுப்புகள் ஜனவரி பாதியில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே, அனைத்து மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தினோம் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.