மகளிர் உரிமைத் தொகை ரூ 1000: வங்கி கணக்கு- ஆதார் இணைப்பு கட்டாயமா?

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு பான்கார்டு ஆதார் இணைப்பு கட்டாயமா? என்ற கேள்வியெழுந்துள்ளது.

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு பான்கார்டு ஆதார் இணைப்பு கட்டாயமா? என்ற கேள்வியெழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Validation of Women Financial Assistance Scheme has started

மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.

Advertisment

இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் ஆம் தேதி முதல் 14ஆம் தேதி 15 வரை நடைபெற்றது. இதுவரை ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்கும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் குறித்து ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் திட்டம் தொடர்பாக பெரம்பலூரில் செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அஹமது பேசினார். அப்போது, “பான் கார்டு இல்லாத ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைக்காத பயனாளிகளுக்கு அஞ்சல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உரிமைத் தொகை வழங்கப்படும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: