/indian-express-tamil/media/media_files/IZBPGg4YMiLIwHlJtJ9E.jpg)
கோவை மாவட்டம் லக்ஷ்மி நகர் நல்லாம்பாளையம் ரோடு இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் பழனிமுருகன். இவரது மனைவி மம்தா (29) நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று இரவு (நவ.13) வீட்டில் இருக்கும் போது பனிக்குடம் உடைந்து மிகுந்த வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்தனர். மம்தா வீட்டிற்கு சென்று பார்க்கும் போது குழந்தையின் தலை வெளியே வந்துள்ளது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுனர் கோபாலகிருஷ்ணன், பைலட் ஜெயக்குமார் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் மம்தாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரையும் குழந்தையையும் தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தாய், குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி, தக்க நேரத்தில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.