தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய உத்தரவின்படி, நெல்லை மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியை பொறுத்தமட்டில் ஆணையராக எம்.பிரதாப் நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார் சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், உயர்க்கல்வித்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எல். மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, ஆவடி மாநகராட்சிக்கு ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், பொள்ளாச்சி சாராட்சியர் பிரியங்கா திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“