/indian-express-tamil/media/media_files/GQVBPCUSEfDKWUKCBVMw.jpg)
11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வியாழக்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுகு புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களுகு புதிய எஸ்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த பாஸ்கரன் சென்னை கிழக்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐ.ஜி-யாக பிரமோத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கூடுதல் டி.ஜி.பி-யாக கல்பனா நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐ.ஜி-யாக தமிழ் சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு சி.ஐ.டி பிரிவு எஸ்.பி-யாக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி-யாக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி.என்.பி.எல் நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை தெற்கு காவல் துணை ஆணையராக பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.