/tamil-ie/media/media_files/uploads/2019/03/modi-Ayyakkannu.jpg)
Modi - Ayyakannu
பிரதமர் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் பெரும் பரபரப்புக்கு ஆளாகியிருக்கின்றன. ஒருபுறம் ஆளும் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மெனக்கெடுகிறது.
மறுபுறம் எதிர்கட்சியான காங்கிரஸ் போனமுறை பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் பிடிக்க முயல்கிறது.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் 111 பேர் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வேட்புமனு செய்யவிருப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தலைநகரில் முன்னெடுத்தும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.