/tamil-ie/media/media_files/uploads/2018/11/diwali-crackers.jpg)
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுக்க தீபாவளி இன்று (நவ.12) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காலை 6-7 மணி வரையிலும், இரவு 7-8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்க எடுக்கப்படும், வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதனை கண்காணிக்க போலீஸ் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தெரிவித்துள்ள காவல்துறை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது எனவும் கூறியுள்ளது. இந்த குழுவில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.