Advertisment

பிளஸ் டூ தேர்வில் தோல்வி: சென்னை மாணவன் மரணம்

தேவா என்ற மாணவர் ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற இரண்டு பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
students suicide

Representational Image

+2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால், சென்னை ஆவடியை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Advertisment

ஏற்கனவே திருவண்ணாமலையை சேர்ந்த மாணவன் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே தற்கொலை செய்த நிலையில், மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவர், அவரது வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் பிரிவில் படித்து வந்தார்.

கடந்த மாதம் தேர்வு எழுதிய நிலையில், இன்று 12ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தேவா என்ற மாணவர் ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற இரண்டு பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று தோழ்வி அடைந்திருக்கிறார்.

இதனால் மனஉளைச்சல் அடைத்த தேவா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வு முடிவு நேரங்களில், மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment