இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்

இளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது

இளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இளவரசிக்கு பரோல்

இளவரசிக்கு பரோல்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனைப் பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இளவரசி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்த உறுதி விண்ணப்பத்தில், அவரது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை நேரில் சென்று கவனித்துக் கொள்ள வேண்டி, கர்நாடக சிறையிலிருந்து செல்ல பரோல் மனு தக்கல் செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், இளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை, ரத்த உறவுகளின் உடல்நிலை ஆகியவற்றை காரணம் காட்டி, பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் தான் இளவரசிக்கு பரோல் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால், தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு எதிராக வர, எம்.எல்.ஏ.க்களுக்கு இளவரசி மூலம் சசிகலா என்ன செய்தி சொல்லி அனுப்புவார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisment
Advertisements

மேலும் படிக்க: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு - முழு விவரம்

Ilavarasi Sasikala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: