/indian-express-tamil/media/media_files/fgtUrGvkB38qQMWWHExP.jpg)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை இன்று (செப்.29) கைது செய்துள்ளது. தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் 2 படகுகளில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது.
தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்படுவது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவர்கள் தொடர் கோரிக்கை மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாரம்பரிய மீன்பிடி பகுதிகளுக்கு மீன் பிடிக்கப் போகும் மீனவர் பிரச்சனைக்கு, அடுத்த மாதம் கொழும்பில் நடக்கும் கூட்டுக்குழு கூட்டத்தில் தீர்வு காண வேண்டும். இலங்கை புதிய அதிபரிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.