Advertisment

ரஜினியைப் பார்க்க ஆசை… சேலத்தில் இருந்து நள்ளிரவில் சென்னை வந்த சிறுமியால் பரபரப்பு

ரஜினியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், 15 வயது சிறுமி சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து நள்ளிரவில் ரஜினி வீட்டுக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
15 year old girl comes to Rajinikanth house, girl comes to chennai in mid night from salem, girl comes to chennai for look rajinikanth, ரஜினியைப் பார்க்க ஆசை, சேலத்தில் இருந்து நள்ளிரவில் சென்னை வந்த சிறுமியால் பரபரப்பு , 15 year old girl comes to Rajinikanth house, from salem to chennai in midnight

ரஜினியைப் பார்க்க ஆசை, சேலத்தில் இருந்து நள்ளிரவில் சென்னை வந்த சிறுமியால் பரபரப்பு

சேலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது பெற்றோரிடம் ஆசிரியரின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த சிறுமி ஆசிரியரின் வீட்டுக்கு செல்லாமல், சேலத்தில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்தார்.

Advertisment

சேலத்தில் இருந்து நள்ளிரவில் சென்னை வந்த சிறுமி, ரஜினிகாந்த் வீட்டு முகவரியை விசாரித்துக்கொண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ரஜினிகாந்த் வீட்டின் காவலாளி சிறுமியைத் தடுத்து நிறுத்தி என்ன என்று விசாரித்துள்ளார். பிறகு, அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார் ரஜினிகாந்த் வீட்டுக்கு விரைந்து வந்து, ரஜினிகாந்த் வீட்டு வாசலில் நின்றிருந்த சிறுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமியின் பாட்டி பல்லாவரத்தில் வசிப்பதைத் தெரிந்துகொண்ட போலீசார், செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறுமியை பாட்டியிடம் ஒப்படைத்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment