/indian-express-tamil/media/media_files/2025/05/28/WoTi1tuyCwdfB2bKhlXd.jpg)
சோளிங்கர் அருகே வீட்டிற்குள் இருந்த இருந்த சிறுமியை ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் 10-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி சம்பவ பலியானார்.
சோளிங்கர் அருகே வீட்டிற்குள் இருந்த நபர் கத்தியால் குத்தி 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உறவுக்கார சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே வீட்டிற்குள் இருந்த இருந்த சிறுமியை ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் 10-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி சம்பவ பலியானார். இந்த தாக்குதலில் உறவுக்கார சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
சோளிங்கர் அருகே இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இரண்டு சிறுமிகள் மீதும் அந்த நபர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஒரு சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது. படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.