8 மாதக் கர்ப்பிணியான 17 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி; கணவர் போக்சோவில் கைது

17 வயது சிறுமி 8 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் அவரது கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயது சிறுமி 8 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் அவரது கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pocso rep

17 வயது சிறுமி கர்ப்பம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, உடல் நலக்குறைவு காரணமாக காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தம் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, அவர் 8 மாதக் கர்ப்பிணி என்பதும், வயது நிரம்பாத நிலையில் திருமணம் ஆனதும் தெரியவந்துள்ளது.

Advertisment

காவல் துறையினரின் தொடர் விசாரணையில், சிறுமி கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணமானவர் என்றும், அவரை கர்ப்பிணியாக்கிய நபரே திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் கிடைத்தது.

சிறுமியின் வயது 18க்கு குறைவாக இருப்பதால், மருத்துவர்கள் உடனடியாக தகவல் அளித்ததை அடுத்து, காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தது. சிறுமியின் கணவர் மீது குழந்தை பாதுகாப்பு சட்டமான போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதுடன், சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Child Abuse Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: