/tamil-ie/media/media_files/uploads/2022/03/murder.jpg)
தூத்துக்குடியைச் சேர்ந்த மாடசாமிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவருடைய மனைவி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு 17வயது மகள் உள்ளார்.
தனது 17 வயது மூத்த மகளுக்கு பல பாய் ஃபிரண்ட்ஸ்களுடன் தொடர்பு இருந்ததை அறிந்த தாய், மகளைக் கண்டித்துள்ளார். இதனால், தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அவருடைய மூத்த மகள் தனது ஆண் நண்பர்களான சங்கர், தங்கம், கோடாரி உள்ளிட்டோருடன் சேர்ந்து தனது தாயின் கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், தாயை கொலை செய்தது அவருடைய 17வயது மூத்த மகள் என்பது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில், பல பாய் பிரண்ட்ஸ்களுடன் தொடர்பில் இருந்த மகளைக் கண்டித்த தாயை, மகளே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us