தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: இன்று எங்கெல்லாம் மழை ?

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sada

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

 தென்மேற்கு வழங்கக் கடலில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. இன்று காலை  சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற  பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம் , திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.  

Advertisment
Advertisements

 தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: