எல்லை தாண்டி மீன்பிடுத்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தனர். இவர்களை தமிழக மீன்வளத் துறையினரும், பாஜகவின் மீனவர் பிரிவினரும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.