Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: ஆகஸ்ட் 3-க்கு தள்ளிவைப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIADMK MLA's Disqualification case, 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு

AIADMK MLA's Disqualification case, 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். இன்று (ஜூலை 25) மூன்றாவது நாளாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதத்தை எடுத்து வைத்தார். அவர் தன்னுடைய வாதத்தில், ‘கட்சிக்கு வெளியில் இருந்து தாக்குதலை நடத்தும் போது அது கட்சியை விட்டு வெளியேறியதாக தான் எடுத்துக் கொள்ள முடியும். அரசை கலைப்பதற்கான அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. அவரிடம் அரசியல் சாசன கடமைகளை ஆற்றுங்கள் என மனு அளிப்பது, ஆட்சியை கலைப்பதற்காக மட்டுமே என கருதப்படும்.

ஆளுநரிடம் அளித்த புகார் என்பது தனி நபருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் அல்ல. பெரும்பாண்மை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த முதல்வருக்கு எதிரான புகார் ஆகும். தங்களுடைய ஆதரவை திரும்ப பெற்று கொள்வதாக ஆளுநரிடம் மனு அளித்தது என்பது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசின் மீதான அவர்களின் ஆதரவை திரும்ப பெற்று கொண்டதாகவே கருத முடியும்.

சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. சபாநாயகர் முடிவின் மீது எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. சபாநாயகர் முடிவில் உள்நோக்கம் இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்’ என வாதிட்டார்.

மேலும், கட்சியில் இருந்து ராஜினாமா செய்தால் மட்டுமே கட்சியில் இருந்து வெளியேறியதாக கருத தேவையில்லை. மாறாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நடத்தை, செயல்பாடு, பேச்சு கூட கட்சியில் இருந்து தானாக வெளியேறியதாக கருத முடியும் எனவும் அரியமா சுந்தரம் தெளிவுபடுத்தினார்.

முதல்வர் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என ஆளுனரிடம் அளித்த கடிதத்தில் இருந்தே, 18 எம்.எல் ஏ.க்களும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகிறது. தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸுக்கு பதிலளிக்க 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க விதிகள் வகை செய்யும் போது, 21 நாட்கள் அவகாசம் வழங்கியதில் இருந்து, இயற்கை நீதி மீறப்படவில்லை என்பது தெளிவாகிறது என வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார்.

நீதிபதி சுந்தர், தன் தீர்ப்பில் சபாநாயகரின் உத்தரவு விபரீதமானது எனக் கூறியுள்ளார். சட்டப்பேரவையின் தலைவர் சபாநாயகர். நீதிபதிகளுக்கு சமமான அதிகாரம் சபாநாயகருக்கும் உள்ளது. அந்த வகையில் சபாநாயகரின் உத்தரவை நீதிபதி சுந்தர் விமர்சித்தது ஏற்க முடியாதது என வாதிட்டார்.

சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு நீதிபதி சத்தியநாராயணன் தள்ளிவைத்தார்.

 

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment