Advertisment

18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
election commission, ttv dinakaran, edappadi palanisamy, 20 தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க

election commission, ttv dinakaran, edappadi palanisamy, 20 தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் 3-வது நீதிபதி சத்தியநாராயணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisment

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு :

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கொடுத்த தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் இந்த வழக்கு விசாரணை 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணனிடம் மாற்றப்பட்டது.

3வது நீதிபதி விசாரணை தொடக்கம் குறித்த செய்திக்கு:

இதனை தொடர்ந்து இவ்வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் நேற்று விசாரணை 12 நாட்களாக நடைபெற்றது. இந்த வழக்கில் தினகரன் தரப்பில் வழக்கறிஞர்கள் மோகன் பராசுரன், பி.எஸ்.ராமன் வாதிட்டனர்.

சபாநாயகர் தரப்பில் வக்கீல் ஆரியமா சுந்தரமும், எடப்பாடி தரப்பில் வைத்தியநாதனும் வாதிட்டனர். அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். இரு தரப்பு வாதங்களும் பகல் 1.30 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதி சத்தியநாராயன் ஒத்திவைத்தார்.

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment