Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் சிறப்பம்சங்கள்

ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாலேயே சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு

18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனவும் அதனை உறுதி செய்வதாக மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

Advertisment

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிராக அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக ஆளுநரை சந்தித்து அதிமுகவில் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம் அளித்தனர். தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் தன்னுடைய நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர், இவர்களை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஜூன் 14 ஆம் தேதி வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி சபாநாயகர் உத்தரவு செல்லும் எனவும் அதை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு நீதிபதியான எம்.சுந்தர் சபாநாயகர் உத்தரவு செல்லாது எனவும் அது இயற்கை நீதிக்கு எதிராக இருப்பதால் அதனை ரத்து செய்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்தார்.

இன்று தீர்ப்பளித்த சத்தியநாராயணன், இந்த வழக்கில், மூன்றாவதாக தாம் ஒரு கருத்தை தெரிவித்ததாகவும் அந்த மூன்றாவது கருத்து என்பது இந்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவில் சட்ட விதிமுறை மீறல் இருப்பதாக நான் கருதவில்லை, பதவி நீக்கம் செய்வதற்கு முன்னர் சபாநாயகர் போதுமான வாய்ப்புகளை வழங்கி உள்ளார். எனவே சபாநாயகர் உத்தரவை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார். மேலும் ஏற்கனவே பிறபிக்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்புகள் அடிப்படையில் இந்த தீர்ப்பை நான் வழங்கவில்லை எனவும், இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார்.

முதல்வருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ கள் ஆளுநரிம் மனு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் இந்த தகவலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கவில்லை. இந்தநிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் மனுக்களை ஏற்க முடியாது எனவும் அவர்கள் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து நீதிபதி சபாநாயகரின் உத்தரவை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி (துரைசாமி) ஏற்கனவே இந்த வழக்கு முடியும் வரை 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் காலியாக அறிவிக்கப்பட்ட உத்தரவு மீது மேல் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் தேர்தல் அறிவிக்க கூடாது என்ற உத்தரவை நீக்குவதாகவும், தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அதேபோன்று பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தகுதி நீக்க உத்தரவு என்பது அரசியலமைப்பின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பாரபட்சமாகவும், உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை போதுமான ஆதாரங்களுடன் 18 எம்.எல்.ஏ'க்கள் தரப்பில் நிரூபிக்கவில்லை

எடியூரப்பா வழக்குடன் இந்த வழக்கை ஒப்பிட முடியாது.. ஆவணங்களை ஆராய்ந்தபோது இந்த வழக்கு முற்றிலும் வேறுபட்டுள்ளது.

18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை.

அரசியல் சாசன கடமை மீறியதாகவோ, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாகவோ, இயற்கை நீதியை மீறியதாகவோ கூற முடியாது...

18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சபாநாயகரால் நெறி தவறி பிறப்பிக்கப்பட்டதாக சொல்ல முடியாது.

முதல்வருக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிம் மனு அளித்தபோது, இதில் தன்னால் தலையிட முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த தகவலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கள் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கவில்லை - நீதிபதி

ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாலேயே சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அவர்களுக்கு (ஓ.பி.எஸ் அணி) சாதகமானவும் ஒருதலை பட்சமாகவும் சபாநாயகர் செயல்பட்டார் என்பதை ஏற்க முடியாது - நீதிபதி.

தகுதி நீக்கம் செய்ததில் சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டார் என்பதை 18 எம்.எல்.ஏ'க்களும் நிரூபிக்கவில்லை - நீதிபதி

தகுதி நீக்க விதிகளையும் இயற்கை நீதியையும் முழுமையாக பின்பற்றியே உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment