Advertisment

தகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை! - 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்

தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை! - 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்

தேர்தல் ஆணையம், கட்சியையும், சின்னத்தையும் முடக்கியிருந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை அவரை மாற்ற வேண்டும் என கோரி அவருக்கு எதிராக, ஆளுநரிடம் புகார் கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத் தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 18 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கூறினர். தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம். சுந்தர் உத்தரவிட்டார்.

இதனால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரிப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் கடந்த மாதம் முதல் விசாரித்து வருகின்றார்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அப்போது 18 எம்.ஏல்.ஏகள் தரப்பில் வாதங்கள் தொடங்கியது. கடந்த மாதம் 23மற்றும் 24 ஆகிய தேதிகளில் மனுதரார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன், வாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆகஸ்ட் 3 மற்றும் 6 ஆம் தேதி தன்னுடைய இறுதி வாதங்களை மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் எடுத்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 6, 7 மற்றும் நேற்று (13) தேதிகளில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி தன்னுடைய இறுதி வாதங்களை எடுத்துவைத்தார்.

அவரைத் தொடர்ந்து, கடந்த 14 ஆம் தேதி அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி தன்னுடைய இறுதி வாதத்தை எடுத்துவைத்தார்.

சபாநாயகரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, அவர் தரப்பிலும், முதல்வர் தரப்பிலும், கொறடா தரப்பிலும் முன் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளித்து, இன்று 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் தன்னுடைய பதில் வாதத்தை எடுத்துவைத்து வாதிட்டார். அப்போது அவர், கட்சி யாருக்கு சொந்தமானது என்ற பிரச்னை காரணமாக தேர்தல் ஆணையம், கட்சியையும், சின்னத்தையும் முடக்கியிருந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

சபாநாயகரை விட அதிக அதிகாரத்தை உடைய தலைமை தேர்தல் ஆணையர் அதிமுகவை முடக்கி பிறப்பித்த உத்தரவு நிலுவையில் உள்ள போது தகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார்.

மேலும் கட்சி சின்னம், கொடி மற்றும் கட்சி யாருக்கு என்ற பிரச்சனை தொடர்பான புகார் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதாக கூறி, ஒபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த சபாநாயகர், 18 எம்.எல்.ஏ கள் மீது பாரபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளார் என வாதிட்டார்.

மேலும், கட்சி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை, தாமாக முன் வந்து கட்சியில் இருந்து வெளியேறியவர்களாக கருத முடியாது. கட்சி தான் பிரதானமே தவிர கட்சித் தலைமை அல்ல எனவும் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது எனவும் வாதிட்டார்.

மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதத்தை நிறைவு செய்ததை அடுத்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நாளை பதில் வாதங்களை எடுத்துவைக்க உள்ளார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment