Advertisment

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: வியாழனன்று நிறைவடைகிறது விசாரணை!

அரசியல் சாசனம் பத்தாவது அட்டவணைப்படி ஒரு தீர்ப்பாயமாக செயல்பட்டு இருக்கிறாரே தவிர, சபாநாயகராக செயல்படவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

கட்சிக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் கட்சி கொறடா உத்தரவை மீறி பேரவையில் வாக்களித்தால் மட்டுமே அது தகுதி நிக்கத்துக்கு வழி வகுக்கும் என 18 எம்.எல்.ஏக்கள் தரப்பில் வாதம். விசாரணை வரும் வியாழக்கிழமை தள்ளிவைப்பு.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவரை மாற்ற வேண்டும் என கோரி அவருக்கு எதிராக, ஆளுநரிடம் புகார் கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத் தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 18 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கூறினர். தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம். சுந்தர் உத்தரவிட்டார்.

இதனால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரிப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் கடந்த மாதம் முதல் விசாரித்து வருகின்றார்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது 18 எம்.ஏல்.ஏகள் தரப்பில் வாதங்கள் தொடங்கியது. கடந்த மாதம் 23மற்றும் 24 ஆகிய தேதிகளில் மனுதரார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் வாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆகஸ்ட் 3 மற்றும் 6 ஆம் தேதி தன்னுடைய இறுதி வாதங்களை மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் எடுத்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 6, 7 மற்றும் நேற்று (13) தேதிகளில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி தன்னுடைய இறுதி வாதங்களை எடுத்துவைத்தார்.

அவரை தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி தன்னுடைய இறுதி வாதத்தை எடுத்துவைத்தார்.

சபாநாயகரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, அவர் தரப்பிலும், முதல்வர் தரப்பிலும், கொறடா தரப்பிலும் முன் வைக்கப்பட்ட வாதங்களுக்கு பதிலளித்தார்.

இதனையடுத்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன் தன்னுடைய பதில் வாதத்தை கடந்த 16 ஆம் தேதி எடுத்துவைத்து வாதிட்டார். அவர் வாதத்தை நிறைவு செய்ததை அடுத்து, 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இன்று தன்னுடைய பதில் வாதத்தை எடுத்து வைத்தார்.

அவர் தன்னுடைய வாதத்தில், முதல்வருக்கு எதிராக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தார்கள் என்பதற்காக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என்ற யூகத்தின் அடிப்படையில் சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.அரசியல் கட்சி என்பதற்கும், சட்டப்பேரவை கட்சி என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

கட்சிக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம், ஆனால் கட்சி கொறடா உத்தரவை மீறி பேரவையில் வாக்களித்தால் மட்டுமே அது தகுதி நிக்கத்துக்கு வழி வகுக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சபாநாயகரின் முடிவு நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.

சபாநாயகரின் உத்தரவுக்கு எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை. ஏனென்றால் இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு சட்டப்பேரவை சம்பந்தப்பட்டது அல்ல... அரசியல் கட்சி சம்பந்தப்பட்டது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியும் என்றார்.

மேலும் அரசியல் சாசனம் பத்தாவது அட்டவணைப்படி ஒரு தீர்ப்பாயமாக செயல்பட்டு இருக்கிறாரே தவிர, சபாநாயகராக செயல்படவில்லை என்பதால், தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் எனவே சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியும் என வாதிட்டார்.

இதனையடுத்து பி.எஸ்.ராமன் தன்னுடைய வாதத்தை நிறைவு செய்யவில்லை.. தொடர்ந்து வாதிட வேண்டும் என்றார். அப்போது சபாநாயகர், சட்டபேரவை செயலாளர், முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய பி.எஸ்.ராமனின் வாதத்தில் புதிய வாதங்களை எடுத்துவைத்தார். எனவே அது தொடர்பாக தங்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளனர். எனவே எங்கள் தரப்புக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றனர்.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி சத்தியநாராயணன் வரும் வியாழக்கிழமை தள்ளிவைத்தார். அன்று அனைத்து தரப்பும் தங்களின் வாதங்களை நிறைவு செய்யுங்கள் என அறிவுறுத்தினார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment