/tamil-ie/media/media_files/uploads/2018/06/18-mlas.jpg)
election commission, ttv dinakaran, edappadi palanisamy, 20 தொகுதி இடைத்தேர்தல், அ.தி.மு.க
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணையை 3வது நீதிபதியான சத்திய நாராயணன் இன்று தொடங்குகிறார். இந்த விசாரணை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.க்கள், 18 பேர், ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இது குறித்த வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த வழக்கின் 3வது நீதிபதியாக சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை அவர் இன்று தொடங்குகிறார். இன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை குறித்த செய்திக்கு
இந்த விசாரணைக்கு பின்னர் விரைவில் வழக்கு முடிவுக்கு வந்து, தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.