Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு: முதல்வர் தரப்பு வாதம் திங்கட்கிழமை தொடரும்!

முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் வாதங்களை எடுத்து வைப்பார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

Tamil Nadu news today live updates, Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

18 MLA's Disqualification Case: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை, அவரை மாற்ற வேண்டும் என கோரி அவருக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத் தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 18 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தீர்ப்பு கூறியது.

வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கூறினர். தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம். சுந்தர் உத்தரவிட்டார்.

இதனால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி

எம்.சத்தியநாராயணன் விசாரிப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் கடந்த மாதம் முதல் விசாரித்து வருகின்றார்.

கடந்த மாதம் 23 ஆம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்கள் தொடங்கியது. கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோரின்

வாதம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆகஸ்ட் 3 மற்றும் 6 ஆம் தேதி தன்னுடைய இறுதி வாதங்களை மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் எடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி தன்னுடைய இறுதி வாதங்களை தொடங்கினார்.

இதனையடுத்து கடந்த 7 ஆம் தேதியும் அவருடைய வாதம் தொடர்ந்து நடைபெறது. அன்று முதல்வர் தரப்பில் வாதம் நிறைவடையாததால் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் இன்று விசாரணை நடைபெறவில்லை வழக்கு விசாரணையை நீதிபதி எம் சத்யநாராயணன் வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தார்.

அன்று தொடர்ந்து முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் வாதங்களை எடுத்து வைப்பார். அவரை தொடர்ந்து அரசு தலைமை கொறடா சார்பில் வழக்கறிஞர் வாதம் நடைபெறும்.

 

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment