Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினாலேயே சபாநயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்!

சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இயற்கை நீதிக்கு எதிரானது. உள்நோக்கம் கொண்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai high court

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணா முன்பு தொடங்கியது. இன்று தொடங்கி ஐந்து நாட்கள் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

Advertisment

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இது குறித்த வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லியிருப்பது என்ன?

வழக்கு விசாரணையின் நேரலையில் தெரிந்து கொள்ள ஐஇதமிழுடன் இணைந்திருங்கள்.

பகல் 4.30 மணி : 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதத்தை எடுத்து வைத்த ராமன் இன்றைய வாதத்தை முடித்துக் கொண்டார். நாளையும் அவர் தொடர்ந்து வாதம் செய்கிறார். அதன் பின்னர் 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மோகன் பராசரன் வாதிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகல் 4 மணி :எங்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த ஆவணங்களும் இல்லை. நாங்கள் முதல்வர் மீது, ஊழல் புகார் மட்டுமே தெரிவிதோம். அதற்காக எங்களை நீக்கிவிட்டார். கொறடா உத்தரவு பிறப்பித்தால் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்திருக்க மாட்டோம். ஆட்சிக்கு எதிராக வாக்களித்துவிடுவோம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே எங்களை நீக்கியுள்ளனர். கொறடா எந்த இடத்திலும் ஆட்சிக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம் என்று சொல்லவில்லை. முதல்வரை விசாரிக்க எங்களுக்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. திமுகவோடு சேர்ந்ந்து ஆட்சியை கவிழ்ப்போம் என்று முதல்வர், கொறடா கடிதத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. எதிர்கட்சிகள் கவர்னரை சந்தித்தார்கள். அதற்கும் நாங்கள் சந்தித்தற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதிர்கட்சியினர் கவர்னரை சந்தித்ததாலே ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதில்லை. எங்கள் மீதான நடவடிக்கை இயற்கை நியதிக்கு எதிரானது. ஓபிஎஸ் உள்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் இப்போது ஆட்சியிலும் கட்சியிலும் இருக்கிறார்கள். அவர்கள் 11 பேர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கடிதம் கொடுத்தோம். ஆனால் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை. எங்களுக்கு விளக்கம் அளிக்க போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என வக்கில் ராமன் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

பகல் 3.10 மணி : செய்திகளில் வந்த செய்தியின் அடிப்படையில் எங்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அரசுக்கு,ஆட்சிக்கு, கட்சிக்கு, எதிராக எப்போதும் 18 பேரும் செயல்படவில்லை முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை அதனை வலியுறுத்தி மட்டுமே ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். 18 எம்.எல்.ஏ.க்களின் வக்கில் பி.எஸ்.ராமன் வாதத்தை எடுத்து வைத்து வருகிறார்.

பகல் 2.50 மணி : உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணையை தொடங்கியது.

பகல் 1.30 மணி : மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் 18 எம்.எல்.ஏ.க்களின் வக்கில் ராமனின் வாதம் தொடரும்.

பகல் 12.50 மணி : முதல்வர், சபாநாயகரிடம் அளித்த பதிலில், 18 எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிராக செயல்படுவார்கள் என்றோ, கட்சிக்கு எதிராக செயல்படுவார்கள் என்றோ கூறவில்லை. மாறாக தனக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக மட்டுமே கூறியுள்ளார் என வக்கில் ராமன் வாதிட்டு வருகிறார்.

பகல் 12.30 மணி : முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிக்கும் போது அதிமுக கட்சியே கிடையாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியிருந்தது. அவ்வாறு இருப்பின் எடப்பாடிக்கு எதிராக மனு அளித்ததற்காக எப்படி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்? என கேள்வி எழுப்பினார் வக்கில் பி.எஸ்.ராமன்

பகல் 12.10 மணி : ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.க்களை அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்ததில் இருந்து அந்த உத்தரவு உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிப்பீர்கள் எனக் கூறி தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என எங்கள் தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் தெரிவிக்கப்பட்டது. எந்த எம்.எல்.ஏ.வும் பதவியை தியாகம் செய்ய விரும்ப மாட்டார்கள் என டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.களின் தரப்பில் ஆஜரான வக்கில் ராமன் வாதம்.

காலை 11.40 மணி : அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என வக்கில் ராமன் வாதம்.

காலை 11.20 மணி : பிரச்சினை தொடர்பாக உள்கட்சியை அணுகவில்லை என முதல்வர் தரப்பில் சபாநாயகரிடம் பதிலளிக்கப்பட்டது.இதன் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம். சபாநாயகர் முன் தாக்கல் செய்யாத ஆவணங்களின் அடிப்படையில் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கையனுக்கும், 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வக்கில் ராமன் வாதம்.

11.10 மணி : சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இயற்கை நீதிக்கு எதிரானது. உள்நோக்கம் கொண்டது. சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார் என 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ராமன் வாதாடி வருகிறார்.

காலை 10.40 மணி : நீதிபதி சத்தியநாராயணா முன்பு விசாரணை தொடங்கியது. எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதத்தைத் தொடங்கினார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment