Advertisment

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன?

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று (ஜூன் 14) மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai high court

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோரின் மாறுபட்ட தீர்ப்பில் சொல்வது என்ன?

Advertisment

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று (ஜூன் 14) மாறுபட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பில், ‘சபாநாயகர் உத்தரவு செல்லும்’ என கூறப்பட்டிருக்கிறது. நீதிபதி சுந்தர் உத்தரவில், ‘சபாநாயகர் உத்தரவு செல்லாது’ என கூறப்பட்டிருக்கிறது. எனவே 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு செல்கிறது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பின் சாராம்சங்களை இங்கே காணலாம்.

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பின் சாராம்சம்:

தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என கூறமுடியாது. சபாநாயகர் உத்தரவை பிறப்பிக்கும் முன்னர் ஆட்சியை கலைப்பார்களா, மாட்டார்களா என இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அதனடிப்படையில் தகுதிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இந்த முடிவை எடுக்க வேண்டுமென சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்தால் முடியாது. அது நீதிமன்ற பணியும் இல்லை. அவருக்கு கிடைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் பிறபித்த உத்தரவுகளில் சபாநாயகர் அதிகாரங்களில் குறைந்த அளவிற்கே தலையிட முடியும். முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

சபாநாயகர் முடிவெடுக்க பயப்படுத்தும் சட்டங்களில் முரண்பாடு இருந்தாலும் தலையிட முடியும். சபாநாயகரின் உரிமையை மீறி முடிவு எடுத்தாலோ, சட்டம் மீறபட்டிருந்தாலோ, இயற்கை நியதி மீறபட்டிருந்தாலோ மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

ஆனால் இந்த விவகாரத்தில் சபாநாயகரால் இவை மீறப்பட்டதாக தெரியவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. அதனால் 18 எம்எல்ஏக்களுக்கு போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

ஏற்கனவே தகுதி தகுதி நீக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர்கள் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியதாக கூறுவது தவறு.

கட்சியில் இருந்து விலகுவது மட்டுமல்லாமல் அதுமாதிரியான நடவடிக்கைகள் கூட கட்சித்தாவல் தான் என்று கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதனடிப்படையில் சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

சபாநாயகர் உத்தரவில் இயற்கை நீதி எவ்விடத்திலும் மீறப்படவில்லை. அதனடிப்படையில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவர் உத்தரவு செல்லும். அந்த உத்தரவை எதிர்த்த 18 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

MLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதி சுந்தர் பிறப்பித்த உத்தரவின் சாராம்சம்:

சபாநாயகரின் இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது. தகுதிநீக்க உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனடிப்படையில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியமாகிறது.

எடியூரப்பா வழக்கை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆளுனரை சந்தித்து மனு கொடுத்ததை அடிப்படையாக கொண்டு கட்சித் தாவலாக நடவடிக்கை எடுத்ததை ஏற்க முடியாது. கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ-க்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 18 பேருக்கு ஒரு முடிவும், ஜக்கையனுக்கு ஒரு முடிவும் எடுத்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, சபாநாயகருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டுமே. அதை குலைக்க கொடுக்கவில்லை.

இந்த காரணங்களுக்காக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது. இவ்வாறு நீதிபதி சுந்தர் உத்தரவு பிறப்பித்தார்.

இரண்டு நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது ஒரு நீதிபதிக்கு பரிந்துரைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த மூன்றாவது நீதிபதி யார் என்பதை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான ஹுலுவாடி ஜி. ரமேஷ் முடிவு செய்வார் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை வழங்கிய பிறகு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 18 தொகுதிகள் காலியாகிவிட்டதாக அறிவிக்கக்கூடாது என்ற 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு, கடந்த செப்டமர் மாதம் 20ஆம் தேதி நீதிபதி எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவு நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Chennai High Court Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment