சென்னையில் மிகவும் முக்கியமான போக்குவரத்துகளில் ஒன்றான மின்சார ரயிலை தினசரி லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயிலானது ரத்து செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
அதன்படி பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதற்கு ஏற்றபடி பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேமாதிரி கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி இடையே மதியம் 1.20 மாலை 5.20 வரை பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனால் மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி. சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி சென்னை கடற்கரை, நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - தாம்பரம் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
