/indian-express-tamil/media/media_files/2025/04/23/BtCo2Ux2A3bQEPBRLxaO.jpg)
திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ் போர்ட்டுடன் 2 பேர் கைது - பரபரப்பு
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலா லம்பூர் நோக்கி ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக நின்றது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை இந்திரா நகரைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி (50). இவர் மலேசியா செல்ல திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இவர் தந்தை பெயர், பிறந்த தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிந்தது.
இதேபோல் சிவகங்ககை மாவட்டம் காரைக்ககுடியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (56), இவர் மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதியை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.