கேரளாவிற்கு சுற்றுலா சென்ற கோவை கல்லூரியில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இருவர் கடலில் மாயமடைந்தனர். கடலோர காவல் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள lகல்லூரி படிக்கும் மாணவர்கள் 9 பேர் கொண்ட குழு சுற்றுலாவிற்காக கேரளா மாநிலம் சென்று உள்ளனர். அப்போது எர்ணாகுளம் - புதுவைப்பின் ஞாயர்கள் பீச்சில் குளிக்கச் சென்று உள்ளனர்.
குளிக்கச் சென்ற போது அப்பகுதி மீனவர்கள் ஆபத்தான பகுதி அங்கு செல்ல வேண்டாம் என எச்சரித்து உள்ளனர், அதனை பொருள்படுத்தாமல் கடலில் குளிக்க இறங்கிய மாணவர்கள் 9 பேரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஜுப்ரான் மற்றும் அப்துல் சலாம் ஆகிய இரண்டு மாணவர்கள் காணாமல் போனதை கண்ட மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மீனவர்கள் அங்கு உள்ள காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் படையினர் காணாமல் போன இருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.